திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயிகள் உள்ளன. ஆதராம் பாளையம், தண்டுகாரம்பாளையம் உட்பட சுற்றுவட்டார 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2022 ஆம் ஆண்டு ஜெயின் கம்பெனி நிறுவனம், “மற்ற நிறுவன நேந்திர வாழையை விட கூடுதல் 30 கிலோ எடை கொடுக்கும், நம்பி வாங்கிச் செல்லுங்கள்” என விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி விவசாயிகள் இந்த வாழை நாற்றுகளைப் பயிரிட்டனர். நடவு செய்து 13 மாத காலத்திற்கு பிறகு வாழையில் பாதி பழுத்த பழ மாகவும், மீதமுள்ள பகுதி பிஞ்சு ஆகவும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஜெயின் கம்பெனியிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் நேந்திரன் வாங் கும் வியாபாரிகள், இந்த வாழைப் பழங்களை வாங்க மறுத்து விட்டனர். இப்பிரச்சனை குறித்து அரசு அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மோகனன் தலைமையில் அக்.6 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட விவசாயி கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஜெயின் கம்பெனி பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாழை பாதிக்கப்பட்டதை குறித்து திருச்சி ஆராய்ச்சி மையம், கோவை வேளாண் துறை உள்ளிட் டோர் ஆராய்ச்சி செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுப் பார்கள் என முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் குழந்தை சாமி, அவிநாசி ஒன்றிய நிர்வாகிகள் வேலுச்சாமி, குமாரசாமி, கருப்புசாமி ஆகியோர் நேரில் கள ஆய்வு செய் தனர்.
இதுகுறித்து ஆதராம்பா ளையம் பகுதி யைச் சேர்ந்த விவசாயி ஈஸ் வரமூர்த்தி கூறு கையில், இரண் டே கால் ஏக்கரில் 2200 வாழைக் கன்றுகள் நடப்பட்டது. வாழை வளர்ச்சி அடைவதற்கு, ஆட்கள் வேலை செய்தது போன்ற முதலீடு மட்டும் சுமார் ரூ.4.20 லட்சம் செலவு செய்து இருக்கிறோம். வியாபாரிகள் இந்த வாழையை வாங்க மறுத்து விடுகின்றனர். ஜெயின் கம்பெனி நிறுவனமே வாழைத்தாரில் இருந்து மீண்டும் உற் பத்தி செய்வதற்கு திரவம் எடுக்க வந்த போது நாங்கள் இதில் எடுக்கக் கூடாது, எங்களைப் போன்ற விவசாயி கள் பாதிக்கக்கூடாது என திருப்பி அனுப்பி விட்டோம். மாவட்ட நிர்வா கமும், தமிழக அரசாங்கமும் இவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசாங்கம் மூலம் ஜெயின் கம்பெனி நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு இழப்பீட்டு தொகையை கொடுக்க வேண்டும். மேலும், அவி நாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கணக்கெடுத்தால் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித் தார். அதே பகுதியைச் சேர்ந்த கருப்பு சாமி என்ப வர் கூறுகை யில், 1.70 ஏக்கர் அளவில் 1300 வாழைக்கன்று கள் பயிரிட்டேன். அத்தனையும் வீணாகி விட்டது. காற்று அடித்தால் வாழை மரங்கள் சாய்ந்து இழப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற் போது இப்படி ஒரு இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இழப்பீடு கிடைக் கும் என்ற நம்பிக்கை இல்லை. வாழை மரங்கள் வேர்கள் படர்ந்து வரும். ஆனால், இதனுடைய வேர்களில் அந்தத் தன்மை இல்லை. மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து இழப்பீடு பெற்று தர வேண்டும். இப்படி ஏமாற் றம் செய்த ஜெயின் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார்.
இதே போல, தண்டு காரம்பாளை யம் விவசாயி சரஸ்வதி கூறு கையில், 1250 வாழைக்கன்றுகள் பயிரிட செய்து சுமார் மூன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருப்போம். வாழைத் தோட்டத்திற்குள் செல்வதற்கு பய மாக உள்ளது. இதை பார்க்க பார்க்க அனுதினமும் கண்ணீர் வராத குறை ஒன்று மட்டும்தான் உள்ளது. எங்கள் தோட்டத்து நேந்திர வாழைக்காய் என்றால் வியாபாரிகள் எந்த ஒரு பதில் பேசாமல் எடுத்து செல்வார் கள். தற்பொழுது ஜெயின் கம்பெ னியிலிருந்து பெறப்பட்ட வாழை கன்று மூலம் வந்த வாழைக்காய் என்பதால் வாங்குவதற்கு மறுத்து விடுகின்றனர். 13 மாதத்திற்கு மேல் உழைப்பு வீணாகி விட்டது. காவல்துறை அதிகாரிகள் தோட்டத்தை பார்வை யிட்டுச் சென்றுள்ளனர். அப்பொழுது உடன் வந்த காவல் அதிகாரிகளும் கூட எங்களை கேட்டா வாழைக்காய் பயிரிட்டீர்கள் என கேட்பதாக, தெரி வித்தார். அதேபோல தண்டுக்காரன் பாளையம் விவ சாயி ராமசாமி யிடம் கேட்ட போது. 1200 வாழைக்கன்றுகள் நட்டு பயிர் செய்தோம். ஜெயின் கம்பெனி 30 கிலோ எடை தரும் என்று கூறி விற்பனை செய் தார்கள். வெறும் 16 முதல் 18 கிலோ மட்டுமே தருகிறது. வாழை மரங்களி லிருந்து திரவம் எடுத்து வாழை கன்று உற்பத்தி செய்வதற்கு மகாராஷ்டிரா மாநிலம் ஜெயின் கம்பெனி சிறந்த நபர்கள் தோட்டத்திற்கு வருகைதந்த போது அருகில் இருந்த விவசாயிகள் நாங்கள் அனைவரும் சிறை பிடித் தோம். இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந் தோம். அப்பொழுது கம்பெனி உரிமை யாளரிடம் தான் பேச வேண்டும், எங்களிடம் சிறை பிடித்து பயனில்லை என்று ஜெயின் கம்பெனி ஊழியர்கள் தெரிவித்தனர். ஜெயின் கம்பெனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர். இது குறித் து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் கூறுகை யில், விவசாயி களுக்கு உண் மையான பாதிப்பு ஏற்பட் டுள்ளது. ஆராய்ச்சி செய்வது என்பது கால நேரத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய விஷயம். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயி களை கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்க ஜெயின் கம்பெனிக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள் முன்பு ஆராய்ச்சி செய்து அதன் பின்பு விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-எம்.அருண், அவிநாசி.