districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாடிக்கையாளரின் பணம் கையாடல் வங்கி ஊழியருக்கு சிறை தண்டனை

உதகை, அக்.31- வாடிக்கையாளரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வங்கி யில் ரூ.13 லட்சம் கையாடல் செய்த ஊழியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த வர் ராஜ்குமார் (44). இவர் குன்னூர் ஸ்டேட் பேங்க் ஆப்  திருவாங்கூர் கிளையில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார்.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒரு வருக்கு வழங்க வேண்டிய ஏடிஎம் கார்டை அவருக்கு அனுப் பாமல் ராஜ்குமார் எடுத்துக் கொண்டார். இதன்பின் தன்  நண்பர்களுடன் இணைந்து அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி சுமார் 3 மாத காலத்திற்குள் பல்வேறு காலகட்டங்களில் மொத்தமாக ரூ.13 லட்சம் கையாடல் செய்துள்ளார். இது குறித்து தாமதமாக அறிந்த வாடிக்கையாளர், வங்கி மேலாள ருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வங்கி மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், ஆய் வாளர் அம்சவேணி தலைமையிலான போலீசார் விசா ரணை நடத்தி ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான கோவை என்ஜிஜிஓ காலனியை சேர்ந்த அருளாளன் (34),  சின்னியம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் (23), திலிப் குமார்  (22) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12  ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், சனியன்று தீர்ப்பு  கூறப்பட்டது. அதில், முதல் குற்றவாளியான ராஜ்குமாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபரா தம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே இருந்த ராஜ்குமாரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் ராஜ்குமாரின் நண்பர்க ளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் படுகாயம்

சேலம், அக்.31- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த காவிரி நகர் பகுதியைச் சேர்ந் தவர் மருந்து விற்பனை பிரதிநிதி லட்சுமிபதி (52). இவரது மகள் அனுஸ்ரீக்கு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத் துள்ளது. மகளை கல்லூரி யில் சேர்த்து விடுவதற்காக, இவர் தனது மனைவி ஜெய சுதா (42), மகள் அனுஸ்ரீ (18), மகன் திருப்புகழ் (11), உறவி னர் நாராயணன் ஆகியோரு டன், திங்களன்று அதிகாலை போச்சம்பள்ளியிலிருந்து அரியலூர் நோக்கி காரில் சென்றுள்ளனர். இந்த காரை  அதே பகுதியைச் சேர்ந்த ஓம்சக்தி (28) என்பவர் ஓட்டி  சென்றுள்ளார். வாழப் பாடியை அடுத்த முத்தம் பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள் ளத்தில் கார் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் லட்சுமி பதி, ஜெயசுதா, திருப்புகழ், அனுஸ்ரீ, ஜெயசுதாவின் சகோ தரர் நாராயணன், கார் ஓட்டு நர் ஓம்சக்தி  ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று கிராம சபா கூட்டம்

சேலம், அக்.31- நவ.1 ஆம் தேதியை தமிழகத்தில் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், ஊராட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக் கும் மகளிர் சுய உதவிகுழுக்களை கௌரவித்தல், நிதி பயன்பாடு குறித்த  அறிக்கை உள்ளிட்டவைகள் விவாதிக் கப்பட உள்ளது. எனவே, இக்கூட்டத் தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம் அழைப்பு விடுத் துள்ளார். மாநகராட்சியில் பகுதி சபா சேலம் மாநகராட்சியின் அவசர கூட் டம் மேயர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளி லும் பகுதி சபா வார்டு கமிட்டி அமைத்து, குறைகள் கேட்க வேண்டும். காலை 10 மணியளவில் கண்டிப்பாக கூட்டம் நடத் திட வேண்டும் என மாநகராட்சி மேயர்  ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக்கொண் டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உங்கள்  தொகுதியில்  முதலமைச்சர்  திட்டம் ஆய்வுக்கூட்டம்

திருப்பூர், அக்.31- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்க ளன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மாவட்ட  அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வ ராஜ், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே. என்.விஜயகுமார், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்  திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர்  தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம்,  தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய எட்டு  சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உங்கள்  தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு  சட்டமன்ற தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய  முக்கிய 10 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நார யணன், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன்  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பூர், அக். 31 - திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கே.செட்டிபாளையம்  பகுதியில் ஒரு பேக்கரியின் முன்புறம் ஆண் பிணம் கிடப்ப தாக நல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பேக்கரி யின் முன்புறமுள்ள படிகளில் பலகாரங்கள் செய்யும் இடத் தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக  கிடந்தார். அழுகிய நிலையில், உடல் உறுப்புகள் சேதம்  அடைந்திருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.   மேலும் இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் இறந்தவர் பெயர் சண்முகம் என்பதும்,  அந்த பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரிய  வந்தது. மேலும் அவர் இறந்து இரண்டு மூன்று நாட்களுக்கு  மேல் ஆகியிருக்கலாம் என்பது தெரிந்தது. இது குறித்து  போலீ சார் விசாரணை செய்து வருகின்றனர்.

ரூ.30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, அக்.31- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடைபெற்ற  நிலக்கடலை ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற் றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம்  நடைபெற்ற ஏலத்திற்கு 940 மூட்டைகள் வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,600 முதல் ரூ.7,900 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,000  முதல் ரூ.7,250 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,900 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 8 வியாபாரி கள், 85 விவசாயிகள் பங்கேற்றனர்.

பலகாரச் சீட்டு நடத்தி ரூ.2.90 கோடி மோசடி: பணத்தை மீட்டுத் தர பாதிக்கப்பட்டோர் மனு

திருப்பூர், அக்.31- திருப்பூரில் பலகாரச் சீட்டு நடத்தி ரூ.2 கோடியே 90 லட்சம்  வரை மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவரை கண்டுபி டித்து பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட வர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். திருப்பூர் செரங்காடு பகுதியில் குமார் என்பவர் “துர்கா தேவி பலகாரச் சீட்டு” என்ற பெயரில் தீபாவளி பண்டிக் கைக்கு சீட்டு நடத்தி வந்தார். இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட வர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டில் சேர்ந் துள்ளனர். வாரந்தோறும் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை  தவணைத் தொகை கட்டி வந்த நிலையில் கடந்த தீபாவளி பண் டிகைக்கு தர வேண்டிய பணத்தை வியாழக்கிழமை தருவ தாக கூறிய குமார், புதன்கிழமை குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. சீட்டு சேர்ந்தவர்கள்  அவரைத் தொடர்பு கொண்டபோது அவரைத் தொடர்பு  கொள்ள முடியவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள்  திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தங்கள் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.  ஆனால் ஒரு வார காலமாகியும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காததால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பலகாரச் சீட்டு நடத்தி  ஏமாற்றி விட்டுத் தலைமறைவானவரை கண்டுபிடித்து தண் டிக்க வேண்டும். தாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தர  வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிஏபி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டம்

திருப்பூர், அக். 31- பிஏபி வாய்க்காலில் ஆக்கிரமிப்பு களை அகற்ற வலியுறுத்தி திருப்பூர்  தெற்கு தாலுகா அலுவலகத்தில் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த  விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருப்பூர் தெற்கு, அவிநாசிபாளை யம், செங்காட்டுபாளையம் பகுதியில்  பிஏபி கிளை கால்வாய் உள்ளது.  இதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி,  நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் இல்லாததால்  விவசாயிகள் கன்னிமுத்து உள்பட பலர்  சிரமத்தை சந்தித்து வருகிறார்கள் என  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் சார்பில், திருப்பூர் தெற்கு தாசில் தார் அலுவலகம், கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்தும் இதுவரை  உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்,  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கதி னர் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவல கத்தில் திங்களன்று காத்திருப்பு போராட்டம்  நடத்துவதாக அறிவிக்கப் பட்டது. அதன்படி திருப்பூர் தெற்கு  தாலுக்கா அலுவலகம் முன்பு திங்க ளன்று காலை விவசாயிகள் பலரும் காத் திருப்பு போராட்டத்தில் கலந்து கொள் வதற்காக வந்தனர். இதற்கிடையே காத் திருப்பு போராட்டத்திற்கு வந்த தமிழக  விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிக ளுடன், தாசில்தார் கோவிந்தராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். விரைவாக பி.ஏ. பி. கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு நீர்  கிடைப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதியளித்தார்.  இதில் உடன்பாடு ஏற்பட்டதை  தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

விபத்தில் 8 பேர் படுகாயம்

திருப்பூர், அக்.31- குன்னூரில் நடைபெற்ற வேன் விபத்தில் திருப்பூரை சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர். திருப்பூரை சேர்ந்த சுந்தர்ராஜ் தனது குடும்பத்துடன் குன்னூரில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 9 பேருடன் வேனில் சென்றுள்ளார். வாக னத்தை திருப்பூர் முருகன்பாளையம் பகுதியை சேர்ந்த முரு கானந்தம் என்பவர் ஒட்டி வந்துள்ளார். வளைகாப்பு நிகழ்வு களை முடித்துவிட்டு திருப்பூருக்கு திரும்புகையில், மலை பாதையில் குரும்பாடி அருகே வாகனம் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வேன் மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. வேன் மோதியதால் மரம் சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பி கள் மற்றும் கார் மீது விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த 5 ஆம்புலன்ஸ் கள் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து  தொடர்பாக குன்னூர் டவுன் போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இன்று கிராமசபை கூட்டங்கள் 

திருப்பூர், அக்.31- திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாயன்று (இன்று) 265 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ள தாக ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் செவ்வா யன்று (இன்று) காலை 11 மணி அளவில் கிராம சபைக்  கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிராம சபைக் கூட் டங்களை நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நிய மிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங் கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கம் உதயம்

நாமக்கல், அக்.31- தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை நாமக்கல் மாவட்டத்தில் உதயமானது. மின் ஆய்வு உரிமம் பெற்றவர்கள், ஒயரிங் பணியாளர் கள், மின் விற்பனை கூடத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஒளி, ஒலி அமைப்பாளர்களின் பேரவை கூட்டம் திங்களன்று அப்துல் ஏஜஸ் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட சிஐடியு செயலாளர் வேலுசாமி, சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், கரூர் கிளைத் தலை வர் வி.கே.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக ஆர்.கோவிந்தராஜ், செயலாளராக அப்துல் ஏஜஸ், பொருளாளராக கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மனவளர்ச்சி குன்றிய மகனுடன் தற்கொலைக்கு முயன்ற முதியவர்கள்

சேலம், அக்.31- மன வளர்ச்சி குன்றிய மகனுடன் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பெற்றோர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை மீட்னர். சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த வேடத்தாம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த இளமகவுண்டர் இவருடைய மனைவி ஆனந்தாயி. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண்  மற்றும் மனம் வளர்ச்சி குன்றிய ஒரு மகனும் உள்ள நிலை யில், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து  வைத்து விட்ட நிலையில் மன வளர்ச்சி குன்றிய ஆண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம்  ஆட்சியர் அலுவலகத்திற்கு மனவளர்ச்சி குன்றிய மகனுடன் மண்ணெண்ணை கேனுடன் தற்கொலை செய்து கொள்ள வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து கோரிக்கைகள் குறித்து விசாரித்து வழிகாட்டினர்.  இதுகுறித்து போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், இளம கவுண்டரின் பூர்வீக சொத்து 6.ஏக்கர் நிலத்தை அவர்களு டைய அண்ணன் தம்பியான செம்மூஞ்சி, பழனிச்சாமி, பாஸ் கர், ஆகியோர் சேர்ந்து  உனக்கு ஆண் வாரிசு இல்லை அத னால் உனக்கு எதற்கு சொத்து என்று கூறியுள்ளனர். மேலும், இவர்கள் வசித்து வரும் வீட்டிலிருந்து அடித்து விரட்டி இவர் களுக்குரிய 2 ஏக்கர் சொத்தையும்  வழங்காமல் மிரட்டியுள்ள னர். மன வளர்ச்சி குன்றிய மகனை பராமரித்துக் கொண்டு  வெளியில் எந்த ஒரு வேலைக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளதால், தங்களுக்கு சேர வேண்டிய இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளவர்களிடமிருந்து மீட்டு தர வேண் டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளுடன் தற்கொலை செய்து கொள்வ தற்காக மண்ணெண்ணெய் உடன் தெரிவித்தனர்.  இதனையடுத்து, சேலம் நகர காவல் துறையினர் கொண்ட லாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இவர்களின் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மனம் வளர்ச்சி குன்றிய மகனுடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள வந்த முதி யோர் தம்பதியால் அதிர்ச்சி ஏற்பட்டது.

உதகை சாலையில் சிறுத்தை நடமாட்டம்

உதகை, அக்.31- உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் கரடி, காட்டெ ருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அள வில் உள்ளன. இந்நிலையில் உதகை சாலையில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றது அப் பகுதியிலுள்ள கண்கா ணிப்பு கேமராவில் பதிவாகி யிருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத் தில் வைரலாக பரவி வருகி றது. முக்கிய அரசு அதிகாரி கள் அடிக்கடி பயன்படுத்தும் சாலையில் சிறுத்தை நட மாட்டம் இருப்பது உதகை  நகர வாசிகள் அச்சமடைந் துள்ளனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதி யில் சிறுத்தை நடமாட்டம்  குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

ரயில் மோதி பெண் பலி

கோவை, அக்.31- ரயில்மோதி பெண் ஒரு வர் இறந்துள்ள சம்பவத்தை  கண்ட அப்பகுதி மக்கள்  ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரயில்வே உதவி ஆய் வாளர் ராமன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.  பின் னர் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதி இறந்து கிடந்த பெண்  யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து தெரிய வில்லை. அவர் ரயில் தண்ட வாளத்தை கடந்தபோது ரயில் மோதி அடிபட்டு இறந் திருக்கலாம் என்று போலீ சார் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.