தருமபுரி, ஜன.5- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தருமபுரி, சேலம், நீல கிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்க ளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். முடக்கப் பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உட னடியாக வழங்க வேண்டும். இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதி யம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் வனப் பாதுகாவலர்கள், வட்டார மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள், மகளிர் திட்ட - 5 ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாணை 115,139 மற்றும் 152 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.சுருளிநாதன் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட செய லாளர் ஏ.சேகர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசியர் கழக மாவட்ட தலைவர் பெ.துரைராஜ், பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசி ரியர் சங்க மாவட்ட தலைவர் முருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் காமராஜ், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாமிநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
சேலம்
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சேலம் மாவட்டம் நாட்டாமை கழக கட்டி டம் முன்பு கட்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெரிய சாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி மாய கிருஷ்ணன், தமிழக ஆசிரியர் முன் னேற்ற சங்க நிர்வாகி கோவிந்தன், தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொரு ளாளர் சந்திரசேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் சண்முகவடிவு, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் திருவேரங்கன், மாவட்ட பொருளா ளர் செல்வம் உள்ளிட்ட 300க்கும் மேற் பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர்.
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு அரசு ஊழியர் கள் சங்கம் மாவட்ட தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப் பாளர்கள் ஜெகநாதன், சரவணன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள், கூட்டமைப்பு நிர்வாகிகள் அருளானந்தம், தங்கபாசு, அரசு, வடிவேல் முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், 500க்கும் மேற் பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.