districts

img

மாணவர் விடுதி: தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

தருமபுரி, நவ.3- தருமபுரி அரசு பொறியியல் கல் லூரி மாணவர் விடுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதனன்று திறந்து வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செய லகத்திலிருந்து காணொலிக் காட்சி யின் மூலம்  தருமபுரி வட்டம், செட் டிக்கரை ஊராட்சியில் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் ரூ.3.66 கோடி மதிப் பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பொறி யியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டி டத்தினை  திறந்து வைத்தார். இத னைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி  குத்துவிளக்கேற்றி விடுதி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி முன்னிலை வகித் தார். அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்து டன் 1465.65 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதியில் மாணவர்கள் தங்குவதற்கு 25 அறை கள், நூலகத்துடன் கூடிய அரங்கம், சமையலறைக் கூடம், உணவு அருந் தும் கூடம், காப்பாளர் அறை, இருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டதாக உள்ளது. 100 மாணவர்கள் இவ்விடுதி யில் தங்கி பயில்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் தருமபுரி கோட் டாட்சியர் (பொ) ஜெயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் இராஜ சேகரன் உட்பட அரசு அலுவலர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.