districts

img

குழந்தைகளுக்கு கல்வி தர வேண்டியது தந்தையின் கடமை

சேலம், பிப்.4- குழந்தைகளுக்கு கல்வி தர வேண்டியது தந்தையின் கடமை என சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராசிரி யர் ஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார். சேலம் கம்பன் கலைவிழா 51 ஆவது ஆண்டு தொடக்க விழா, ஏவிஆர் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கம்பன்  கழகத் தலைவர் என்.ஆர்.சுதர்சனம் தலைமை வகித்தார்.  அப்போது பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பேராசி ரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில், கம்பனில் கல்லுக்குள்  ஈரமாய் பெரிதும் மிளிரும் மாந்தர் மானுட மாந்தர்களே! அரக்கர் மாந்தர்களே! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. அப்போது பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசுகையில், குழந்தைகளுக்கு கல்வி தர வேண்டியது தந்தை யின் கடமை. அதேபோல பெற்றோரை பெருமைபடுத்தும் பிள்ளைகளாக இருக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சேலம் கம்பன் கழகச் செயலாளர்கள் கரு. வே.சுசீந்திரகுமார், புலவர் ப.ராமன், பொருளாளர் ஆர்.சந்திர சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.