திருப்பூர், டிச. 3 - சமூகநீதி, பாலின சமத்துவம் ஏற்பட வாய்ப்பு அளிக்கக்கூடியது இந்தியாவின் அரசியல் சாசனம், ஆனால் அதை ஆட்சியா ளர்கள் நடைமுறைப்படுத்தாததால் சமூகநீதி, பாலின சமத்துவத்திற்காக போராட வேண்டிய நிலை உள்ளது என்று சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.எஸ்.செண்ப கம் கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டக்குழு சார்பில் அரசியல் சாசன விழுமியங்களும், கம்யூனிஸ்டுகள் பங்களிப் பும் என்ற 10 நாள் தொடர் வகுப்பு நடைபெற்று வருகிறது. அதன் நான்காம் நாள் அமர்வில் எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது தலைமையில் “அரசியல் சாசனம், சமூக நீதியும், பாலின சமத்துவமும்” என்ற தலைப்பில் சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்படும்போதே சமூ கத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித் துவப்படுத்தும் அடிப்படையில் உறுப்பி னர்கள் நியமிக்கப்பட்டனர்.
60 நாடுகளின் அர சியல் சட்டங்களை ஆய்வு செய்து அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு நமது அரசி யல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட் கள் விவாதித்து 11 அமர்வுகள் தீவிர விவாதம், கலந்துரையாடல் நடத்தி அரசியல் சட்டம் ஏற் கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில் 7535 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அவற்றில் 2ஆயிரத்து 474 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. அரசியல் சட்டத்தை முன்மொழிந்து அம் பேத்கார் பேசும்போது, நம் நாட்டு அரசியல் சட்டம் அமைதிக் காலத்திலும், போர்க் காலத் திலும் என எல்லா காலத்திற்கும் பொருத் தமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவின் ஒற்றுமை பாதுகாப்பானதாக இருக்கும். ஆனால் இந்த அரசியல் சட்டத்தை அமல்படுத்துபவர்கள் சரியானவர்களாக இல்லாவிட்டால் பாதிக் கப்படும் என்று கூறினார். அதைத்தான் இப் போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அரசியல் ஜனநாயகத்துடன் நாம் மன நிறைவு கொள்ளக் கூடாது, இதன் மூலம் சமூக ஜனநாயகமாக மாற வேண்டும். அது இல்லா மல் இந்த அரசியல் சட்டம் நீடிக்க முடியாது என்றும் அம்பேத்கார் கூறினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத பகுதிகள். இதைப் பிரிப்பது ஜனநாயகத் தைத் தகர்க்கும். அரசியல் சுதந்திரம் பெற்ற தன் மூலம் நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கை முறைக்குள் நுழையப் போகிறோம். அதா வது அரசியல் சமத்துவம் இருக்கும், ஆனால் சமூகப் பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு நீடிக்கும். இதில் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை ஏற்படுத்துவதன் மூலம் தான் சமூக நீதி யையும், பாலின சமத்துவத்தையும் ஏற்படுத்த முடியும். அனைவருக்கும் தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் இருக்கும், தனி மனித கௌரவம் பாதுகாக்கப்படும் என்று தெளிவாக அரசியல் சாசனத்தில் வரையறுக் கப்பட்டது. பெண்களை மாண்புகளை இழிவு செய் யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அறிவியல் மனப்பான்மை இருக்க வேண்டும். மனிதாபிமானம் இருக்க வேண்டும், பொதுச் சொத்துகளை பாதுகாக்க வேண்டும், வளர்ச்சிக்கான ஒன்றிணைவு இருக்க வேண் டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பொதுத்துறைகள் தனியார்ம யம் ஆக்கப்படுகின்றன. வளர்ச்சிக்கு எதிராக வெறுப்பு அரசியல் பரப்பப்படுகிறது. அனை வருக்கும் இலவச கல்வி பற்றி கூறப்பட்டது படிப்படியாக கைவிடப்பட்டு இலவச ஆரம் பக் கல்வி என்று மாற்றி, வணிகமயம் ஆக்கப் பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட படி அரசு நிர்வாகம், ஆட்சி செயல்பட்டாலே சமூக நீதியும், பாலின சமத்துவமும் ஏற்ப டுத்த முடியும். ஆனால் அவை நடைபெற வில்லை. நம் அரசியல் சாசனம் வர்ணாசிரமத் துக்கு எதிரானது. பிறப்பின் அடிப்படையில் குலத்தொழில் என்பதற்கு எதிரானது. உண்மையான சமூக நீதி இருந்தால் அதில் சோசலிசத்தின் கூறுகள் இருக்கும். ஆனால் நடைமுறையில் அது இல்லை. எனவே ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவத் தைப் பாதுகாக்க இன்று போராட வேண்டும். இந்தியாவில் சாதி என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்ல, வர்க்கமாகவும் உள் ளது. எனவே சமூக நீதிக்கான போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்துடன் இணைந்தது. இந்த இரு போராட்டங்களை யும் இணைத்து நடத்துவதன் மூலமே சமூக நீதியையும், பாலின சமத்துவத்தையும் ஏற்ப டுத்த முடியும்.இவ்வாறு ஆர்.எஸ்.செண்ப கம் கூறினார். இந்த வகுப்பில் திரளானோர் கலந்து கொண்டனர்.