கோவை, ஜூலை 24- சமாதான காலம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற காலத்தில் தான், கலவரத்திற்கான விதை ஊன்றப்படு கிறது. பாஜகவின் எட்டு ஆண்டு கால குற்றப்பத்திரிகையே “முகாம்” நாவல் முகாம் நாவல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா உரையாற்றினார். கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்திபுரம் கமலம்துரை சாமி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் அ.கரீம் எழுதிய முகாம் நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் மற்றும் அச் சுறுத்தல் குறித்து முகாம் நாவல் பேசு கிறது. இந்நூல் வெளியீட்டு விழா நிகழ் விற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி யின் மலரவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி வர வேற்புரையாற்றினார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் முகாம் நூலை வெளி யிட, திமுக மாநில இணை செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி பெற்றுக்கொண்டார்.
சமாதான காலத்தில் கலவர விதை
இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், இஸ் லாமியர்கள் வெளியிலிருந்து வருவ தாக சங்பரிவாரத்தினர் கூறி வருகின்ற னர். இந்தியாவிற்கு இஸ்லாமியர்க ளின் வருகை வணிகம் சார்ந்ததாக இருந்திருக்கின்றது. இந்த வணிகம் சார்ந்த தொடர்பு என்பது, பிற்காலத்தில் இந்தியாவிலேயே தங்கி இரண்டறக் கலந்து, பின்நாளில் அவர்கள் இந்தி யாவின் பூர்விகுடிகளாக மாறினர். எத்த னையோ இஸ்லாமிய மன்னர்கள் இந்தி யாவை ஆண்டு கொண்டிருந்தனர். இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவையும் இஸ்லா மிய நாடாக மாற்றி இருக்க முடியும். ஆனால், அவர்கள் மதமாற்றத்தில் ஈடு படவில்லை. இந்து மதத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகவே மக்கள் பிற மதத்தை நாடுகின்றனர். எத்தனையோ இஸ்லாமிய சகோத ரர்கள் சுதந்திர போராட்டத்தில் தங் களை இணைத்துக் கொண்டனர். ஆனால், ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்கள் சுதந்திர போராட்டத்திற்கு எந்தவித ஒத் துழைப்பையும் நல்கவில்லை. சமா தான காலம் என்று நாமெல்லாம் நம்பிக் கொண்டிருக்கின்ற காலத்தில் தான், கலவரத்திற்கான விதை ஊன்றப்படு கிறது. பின்னாளில் அதன் வெளிப்பாடு தான் கலவரம். இஸ்லாமியர்களைப் பற்றி மக்கள் மத்தியில் தவறாக வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுகி றது. இந்த முகாம் நாவலானது சிறு பான்மை மக்கள் மற்றும் இஸ்லாமியர் களை குறித்து அவர்கள் வாழ்வாதார மற்றும் சூழ்நிலை குறித்து விவரிக்கின் றது. இந்த முகாம் புத்தகமானது ஏதோ இஸ்லாமியர்களின் குடியுரிமை பற்றி பேசுகிற நாவல் அல்ல. 8 ஆண்டு கால பாஜக அரசின் குற்றப்பத்திரிகை தான் இந்த புத்தகம். ஒட்டுமொத்த சமூகத்தையும் வெவ் வேறு காரணங்களின் பெயரால் பதற் றத்திற்கு உள்ளாக்கக் கூடிய அரசு இப் போதுள்ள அரசு. சமூகத்திற்கு சொல் லப்பட வேண்டிய செய்தியை ஒரு அபாய மணி போல எழுத்தாளர் அ.கரீம், நாவல் வழியே கூறியிருக்கிறார், என் றார்.
சரியான புரிதல் வேண்டும்
தமுஎகச மதிப்புறு தலைவர் தமிழ்ச் செல்வன் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன வெல்லாம் நடக்கும் என்பது ஒரு எடுத்துக்காட்டாக விவரிக்கிறது இந்த முகாம் நூல். வகுப்புவாத சக்தியை எதிர்த்து நாம் போராட வேண்டிய சூழல் உள்ளது. வருகின்ற 2025 நூற்றாண்டு கொண்டாட உள்ள சங்பரிவாரங்கள் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கி றது என்பது தெரியவில்லை. மக்கள் மத அடையாளங்களுக்குள் தங்களை புகுத்திக் கொள்கின்றனர். இது அவர் களுக்கு பாதுகாப்பானது அல்ல. தமி ழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மக்கள் தங்கள் ஒரு குற்றத்திற்கு உள் ளாக்கப்பட்ட சமூகம் என்பதை இஸ்லா மியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக் கள் மத்தியில் நாம் ஏற்படுத்தியிருக்கி றோம். இது குறித்தான எந்த அச்ச மும் இல்லாமல் இந்திய சமூகம் உள் ளது. இன்றைக்கு நாம் என்ன விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட அரசியல் உரை யாடலை அவர்கள் (சங் பரிவாரங்கள்) தீர்மானிக்கின்றனர். நமது கருத்துக் களை மிகத்தெளிவாக புரிந்து கொண்டு மக்களிடையே எடுத்துக்கூற வேண்டும். சங் பரிவாரங்கள் பிரச்சனையை தூண் டிவிட்டு, விவாத பொருளாக மாற்று கின்றனர். அவர்களது அஜெண்டாவை நாம் முன்னெடுத்துச் செல்கிற போக்கு தான் உள்ளது. ஆகவே நாம் சரியான புரிதலோடு மக்களை அணுகினால் மட் டுமே இதற்கு தீர்வு காண முடியும், என் றார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு. கே.சிவஞானம், திராவிட தமிழர் கட்சி யின் தலைவர் வெண்மணி, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செய லாளர் ச.பாலமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய லாளர் இலக்கியன், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் இ.மு.சாஜித், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலையின் வெங்கடா சலம், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க ஜோதிகுமார், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி திலீபன், வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் சிவா உட்பட பலர் கருத்துரையாற்றினர்.