districts

img

கை கொடுக்கவில்லை மோடியின் தெரு உலா

கோவை, மார்ச் 18- தனக்கு சொந்த செல்வாக்கு இல்லையென்ற போதும், தனது  கோட்டை என சொல்லிக்கொண் டிருக்கும் அதிமுகவில் ஓட்டை போட வேண்டும் என்பதற்காகவே மோடியின் ரோடு ஷோ என தம் பட்டம் அடித்து ஏற்பாடு செய்தது பாஜக. இதற்காக கோவை மாநகர மக்களை படாத பாடு படுத்தி பெரும் அவதிக்குள்ளாக்கி விட்டனர்.  அவிநாசி சாலை, காந்திபுரம், நூறடி சாலை, மேட்டுப்பாளையம் சாலை முழுவதும் முடக்கிப்போட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்ததுபோன்று சாலையில் ஒரு மனிதரைக்கூட நடமாட விடாமல் தடுத்து விட்டனர். வியாபார, வணிக  தளங்கள் அதிகம் உள்ள இப்பகுதி யில் மக்கள் நடமாட்டம் இல்லாத தால் பெரும் பாதிப்புகளை இப்பகு தியில் உள்ள வியாபாரிகள் சந்தித்த னர். முக்கிய சாலைகள் அடைக்கப் பட்டதால், இதர சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அல்லோலகப்பட்டனர். குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையில் பூமார்க்கெட் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களை அனுமதிக்காததால், பூமார்க்கெட் முற்றிலுமாக ஸ்தம்பித்தது. டன்  கணக்கான பூக்கள் விற்பனையா காமல் தேக்கம் அடைந்தது. ஒரு நாள்  மட்டுமே தாங்கும் நிலையில் உள்ள  பூக்கள், இந்த கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், விற்பனைக்காக வந்திருந்த பூக்கள் வெந்து அழுகிப்போனதால் மொத்த  பூ வியாபாரிகள் பெரும் நஷ்டத் திற்கு உள்ளாகினர். 

இதேபோன்று மோடியை வர வேற்கிறோம் என்கிற பெயரில்,  புதிதாக போடப்பட்ட சாலையில்  கொடிகளை நட்டுகிறோம் என்கிற  பெயரில் இயந்திரங்களைக் கொண்டு சாலை முழுவதும் ஓட் டையை போட்டு நாசப்படுத்தினர்.  இவ்வளவு அளப்பறையை செய்த பிறகும், மோடியின் தெரு  உலா எதிர்பார்த்த கூட்டம் வராத தால், அண்ணாமலை மற்றும் எல். முருகன் முகங்கள் கருத்து சுறுங் கிப்போனது. மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே  மோடியின் ரோடு ஷோ ஆரம்பித்தது.  அங்கு திரண்டிருந்த பாஜகவினர், மோடியின் வாகனம் ஊர்ந்து செல்லச்  செல்ல பாஜகவினரும் அப்படியே வாகனத்தையொட்டியே நடந்து  கடைசி வரையிலும் கூட்டம் இருப் பது போலவே காட்ட முயன்றது அப்பட்டமாக தெரியவந்தது. இந்திய, தமிழக, கோவை மக்கள் 98 குண்டு வெடிப்பு என்கிற அந்த துரதிஷ்ட சம்பவத்தை மறந்து  இயல்பு நிலைக்கு திரும்பி வணி கத்தை, தொழிலை ஒன்றிய அரசின்  ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, மூலப் பொருட்களின் விலையேற்றம் அத்த னையும் தாக்குப்பிடித்து ஓகோ என்றில்லை என்றாலும் ஏதோ பர வாயில்லை என்கிற நிலையில் தொடர்கிறது. இருந்தாலும், திரும் பத்திரும்ப குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவில் கொண்டு வரவேண்டும், அதன் மூலம் அரசி யல் ஆதாயம் தேடவேண்டும் என்கிற  பாஜக மற்றும் சங் பரிவாரங்களின் வேலையாக இருக்கிறது. அந்த அஜண்டாவில் ஒன்றாகத்தான் மோடியின் ரோடு ஷோ நிறைவில்  குண்டு வெடிப்பில் இறந்தவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை  திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர் பாஜகவினர். இருப்பினும், தலைகீழாய் நின்று  தண்ணீர் குடித்தாலும், தரையில் உருண்டு பிறண்டாலும், தமிழகத் தில் தாமரை மலரவே மலராது என் பது சர்வ நிச்சயம் என்பதை மோடி யின் ரோடு ஷோ பாஜக தொண்டர்க ளுக்கு உணர்த்தியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார் கள்.