திருப்பூர், மார்ச் 18- அரசியலில் காசு கொடுத்து ஓட்டு வாங்கு வது சரியல்ல, ஆபத்தா னது என்றும், தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கண்டனம் தெரிவித்தார். திருப்பூரில் கேத்தம்பாளையம் தியாகி ஆர்.பன்னீர்செல்வம் 24ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. பி.என்.ரோடு பிச்சம்பாளையம் புதூர் சந்திப்பில் இருந்து கேத்தம்பாளையம் தியாகி பன்னீர்செல்வம் நினைவிடம் வரை நினைவஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் நினைவிடம் முன்பாக கட்சியின் செங்கொடியை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, பன்னீர்செல்வம் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.பாலபாரதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஜீனா கார் மெண்ட்ஸ் தொழிலாளர்கள் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர்,
தொழிற்சங்கத்தினர் மலர் வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, பிச்சம்பாளையம் புதூர் சாலை யில் நடைபெற்ற நினைவு தினப் பொதுக் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா ளர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் தியாகி பன்னீர்செல்வத்தின் மகனுக்கு ஆடைகளை வழங்கி கே.பாலபாரதி சிறப்புரை ஆற்றினார். அப்போது தமி ழக தொழிலாளர்களை சோம்பேறிகள் என இழிவு படுத்துவதற்கு கே.பாலபாரதி கடும் கண்டனம் தெரி வித்தார். தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து விட்டு நான்கு தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர் களை மத்திய அரசு ஏமாற்றுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும், அரசியலில் காசு கொடுத்து ஓட்டு வாங்குவது சரியல்ல, ஆபத்தானது என்றும், தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என் றும், மதநம்பிக்கை தனிப்பட்டவர்களின் உரிமை என் றும் அவர் கூறினார். முன்னதாக, இப்பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன் ஆகியோர் உரையாற்றினர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, பனியன் சங்க துணைச் செயலாளர் எம்.என்.நடராஜ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.பானுமதி, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கே.சாமியப்பன் நன்றி கூறினார்.