districts

ரூ.5 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் அரசு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு

தருமபுரி, ஜூலை 17- மாங்கரை ஊராட்சிக்குட்பட்ட அரசு புறம் போக்கு நிலத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம்  மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட் டுள்ள சம்பவம் குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த மாங்கரை ஊராட்சிக்குட்பட்ட மஞ்ச நாயக்கனஅள்ளி கிராமம், வெள்ளகரடு பகு தியில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்க ருக்கு மேல் புறம்போக்கு நிலம் உள்ளது.  இந்த புறம்போக்கு நிலத்தில் வேம்பு, பாளை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நட்டு  வளர்த்து வருகிறது. தற்போது அது வளர்ந்து வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இந் நிலையில், வெள்ளக்கரடு பகுதியில் உள்ள மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், வெள் ளக்கரடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத் தில் துறிஞ்சி, வேம்பு, பாளை பல்வேறு வகை யான மரங்களை வனத்துறை வளர்த்து பாது காத்து வருகிறது. ஆட்கள் நடமாட்டம் இல் லாத பகுதி என்பதால், வருவாய் துறை அதிகா ரிகளின் உதவியோடு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தி வருகின்றனர். தற் போது சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேம்பு,  பாளை, துறிஞ்சி உள்ளிட்ட மரங்கள் கடத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதி காரிகளுக்கு தகவல் கொடுத்தும், எந்த நடவ டிக்கையும் எடுப்பதில்லை. இந்த வனப் பகுதிக்கு வருவாய் துறையினர் ஆய்வுக்கு  வராமலேயே, பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர். அரசு புறம்போக்கு நிலங்களின் அருகில் விவசாயி கள் சிலர் விவசாயம் செய்து குடியிருந்து வரு கின்றனர். விவசாயிகளின் வயலை ஒட்டி அரசு  புறம்போக்கு நிலம் உள்ளதாலும், வளர்ந்த மரங்களால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற் படுவதாக, வயலையொட்டி உள்ள மரங் களை விவசாயிகள் மரம் கடத்தும் கும்ப லுக்கு சொற்ப பணத்திற்கு விற்பனை செய் கின்றனர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாக மும் மரங்களை வளர்ப்பதால் விவசாயம் செழிக்கும் என்பதால் மரக்கன்றுகளை இல வசமாக வழங்கி வருகிறது. இதனை சில நபர்கள் அதிகாரிகளின் உதவியோடு நன்கு  வளர்ந்த மரங்களை செங்கல் சூளைக்காக வெட்டி கடத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் மரங்களை வெட்டி கடத்தி வரும் அடை யாளம் தெரியாத நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.