நாமக்கல், ஜன.12- கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையைவிட குறைவாகவே அதி காரிகள் கொடுப்பதாகவும், இப்பிரச்ச னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொரு ளாளர் பி.பெருமாள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நாமக்கல் மாவட் டம், குமாரபாளையத்தில் செய்தியாளர்களி டம் கூறுகையில், தமிழ்நாட்டில் தைப் பொங்கல் பண்டிகை இன்னும் இரு தினங் களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமி ழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பண் டிகை சிறப்பாக கொண்டாடுவதற்காக, நியாய விலை கடைகள் மூலம், விலையில்லா பொங்கல் பொருட்கள் அரிசி மற்றும் சர்க் கரை வழங்கி வருகின்றனர். மேலும், குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிதியும், முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டு வரு கிறது. இதற்காக தமிழக அரசு, விவசாயி களிடமிருந்து கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சமய சங்கலி, எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பொங்கல் கரும்புகள் பயிரி டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெறப்படும் பொங்கல் கரும்புகள், 20 கரும்புகள் ஒரு கட்டு என்றும், 20 கட்டுகள் ஒரு வண்டி என்றும் விலைபேசி கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் கரும்புகளுக்கு 20 கரும்புகள் கொண்ட 20 கரும்பு கட்டு களுக்கு அரசு நினைத்த விலை 13 ஆயிரத்து 500 ரூபாய் என்றால், விவசாயிகளுக்கு ரூ.7,200 மட்டுமே வழங்கப்படுகிறது. இத னால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு ஒன்றுக்கு 18 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண் டும், என பி.பெருமாள் தெரிவித்தார்.