திருப்பூர், ஜூலை 23 - திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருவோருக்கு உணவு தருவதில் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க் கின்றனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதி ரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் ஆகிய மூன்று இந்த மருத்துவப் பிரிவுகள் செயல் பட்டு வருகின்றன. இந்த மருத்துவத்தில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறு வதற்கு 25 படுக்கை வசதியும் இங்கு உள்ளது. தற்போது இங்கு மூன்று பிரிவுகளையும் சேர்ந்த 19 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உள்நோயாளி களுக்கு உணவு தருவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி திருப்பூர் அரசு சித்த மருத்து வர் தனம் கூறுகையில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இங்கு செயல் பட்டு வந்த காலத்தில் இருந்து நீண்ட நாட்க ளாக, இந்திய மருத்துவ பிரிவு உள்நோயா ளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனை உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கு வதன் ஒரு பகுதியாக இங்குள்ளோருக்கும் உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையாக தரம் உயர்த்தப்பட்டு விட்ட நிலை யில், இங்குள்ள இந்த மருத்துவப் பிரிவு உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க நிர் வாக ரீதியாக ஒதுக்கீடு இல்லை என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் பெரிச்சிபாளை யத்தில் இருந்து இந்த மருத்துவமனைக்கு உணவு கொண்டு வருவதற்கான வாகன ஏற் பாடும் இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே இங்குள்ள உள்நோயாளிகளுக்கு உணவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நாங்கள் மாற்று ஏற்பாடு செய்து நோயாளிகளுக்கு உணவு வழங்கி வருகிறோம். எனினும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் நாங்கள் நிர்வாக அடிப்படையில் முயற்சி செய்து வருகிறோம், என்று கூறினார்.
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முருகேசனிடம் கேட்டபோது, ஏற்கெனவே மருத்துவத் துறை இணை இயக்குநர் கட்டுப் பாட்டில் இருந்தபோது அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுடன், இந்த மருத்துவப் பிரிவு உள்நோயாளிகளுக்கும் உணவு வழங் கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நிர்வாக ரீதியாக வெவ்வேறு துறைகளின் கட்டுப்பாட் டுக்குள் மாறியுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை என்பது அரசு மருத்துவக் கல்வித் துறை யின் (டிஎம்ஈ) கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதே சமயம் இந்த மருத்துவப் பிரிவு என் பது அரசு மருத்துவ சேவைத் துறையின் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டில் உள்ளது. வெவ் வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் பழைய முறையில் இங்கிருந்து அங்கு உணவு தர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. அப்படிச் செய்தால் பிற்பாடு தணிக்கை பிரச்சனை வரும். எனவே, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண, மாநில அரசின் மருத்துவ சேவைத் துறைக்கு இங்குள்ள இந்த மருத்துவ பிரிவு மூலம் கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும், அல் லது திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அவர்கள் ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொடுத் தால் இங்கிருந்து அவர்களுக்கு நாங்கள் உணவு தர முடியும்.
அதே சமயம் அவர்கள் தான் வாகன ஏற்பாடு செய்து உணவை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித் தார். இது பற்றி சித்த மருத்துவர் தனம் கூறுகை யில், நிர்வாக ரீதியாக இப்பிரச்சனை இருப்பது உண்மைதான். எனவேதான் இங் கேயே தனி சமையலர் உள்பட உணவு தயா ரிப்பு செய்வதற்கு நாங்கள் எங்கள் மேலதிகா ரிகளுக்கு கடிதம் எழுதி அனுமதி கோரியுள் ளோம். மேலும் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்று தெரிவித் தார். இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி இந்த மருத்துவப் பிரிவில் தங்கி சிகிச்சை பெறும் உள்நோயாளி களுக்கு உணவு கிடைப்பதை உத்தரவாதப்ப டுத்த வேண்டும். நிரந்தர தீர்வு காணவும் உரிய தலையீடு செய்ய வேண்டும். தற்போது இவர் களது உணவு தருவதற்கு உரிய ஏற்பாடு, விடை கிடைக்காத கேள்வியாக நீடிக்கிறது. இதே நிலை நீடித்தால் காலப் போக்கில் இந்த மருத்துவப் பிரிவு உள்நோயாளி கள் தங்கி சிகிச்சை பெறுவதே பாதிக்கப்ப டக்கூடிய நிலை ஏற்படும். எனவே அவசர அவ சிய உணர்வோடு மாவட்ட நிர்வாகம் இப்பிரச் சனையை மாநில அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று நோயாளிகள் தரப்பில் எதிர் பார்க்கின்றனர்.