உடுமலை ஜூலை 1- திருமூர்த்தி அணையில் பல வருடங்க ளாகப் படகு சவாரி இயக்கப்படாமல் இருப்ப தால் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணி கள் ஏமாற்றம் அடைந்து திரும்பும் நிலை உள்ளது. உடுமலையிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்தி மலைக்கு மாநிலம் முழுவதுமிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார் கள். திருமூர்த்திமலையின் மேல் செயற்கை யாக உருவாக்கப்பட்ட பஞ்சலிங்க அருவி மற்றும் மலையின் அடிவார பகுதியில் அமண லிங்கேஸ்வரர் கோவிலும், அங்கு இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணை யின் கரை பகுதியில் சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என அனைவரையும் கவரும் வகையில் உள்ள சுற்றுலாத் தலத்தில் அடிப்படை வசதி கள் இல்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் அணை பகுதியில் சுற்றுலாப் பய ணிகளைக் கவரும் வகையில் தளி பேரூராட்சி நிர்வாகத்தால் 1980ஆம் ஆண்டு படகு சவாரி துவக்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு விற்குப் படகு சவாரியை இயக்க 3 பெரிய படகு மற்றும் 2 சிறிய படகு வழங்கப்பட்டது. இந்த படகு சவாரியின் மூலம் கிடைக்கும் வரு வாயில் 25 சதவீதம் பேரூராட்சி நிர்வாகத்திற் கும் 75 சதவீதம் மகளிர் சுய உதவிக்குழுவிற் கும் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற நிபந்த னையின் அடிப்படையில் சிறப்பாக நடை பெற்று வந்த படகு சவாரி கடந்த சில ஆண்டு களாக இயக்கப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது: திருமூர்த்தி மலையைச் சிறந்த சுற் றுலா தளமாக மாற்றுவோம் என்ற அரசின் அறிவிப்புகள் மட்டும் பல ஆண்டுகள் தொடர் கிறது ஆனால் தற்பொழுது வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதிகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்வது படகு சவாரி. தற் பொழுது பழுதடைந்த படகுகள் மட்டும் காட்சிப் பொருளாக உள்ளது. இதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் தனியார் நிறுவனம் படகு சவாரி திட்டத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது இதை அனுமதிக்காமல் அரசு சார்பில் படகு சவாரி திட்டத்தை மீண்டும் தொடங்கி திருமூர்த்தி மலைப் பகுதியைத் தரம் வாய்ந்த சுற்றலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.