அவிநாசி,மார்ச் 24 - அவிநாசி அருகே கணியம் பூண்டி பிரிவில் உள்ள பாலத்தின் அருகே இருந்து எடுத்துச் செல்லப் பட்ட மண் என்ன ஆனது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார். அவிநாசி ஒன்றியம், மங்கலம் செல்லும் சாலையில் கணியம் பூண்டி பிரிவில் முன்புறம் சில மாதங்க ளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கீழே செம்மண் மற் றும் கிணற்று மண் பரவலாக இருந் தது. இவ்வழியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி சென்று கொண்டிருந்தபோது ஜேசிபி எந்தி ரத்தின் மூலமாக டிப்பர் லாரியில் மண் நிரப்பி கொண்டு இருந்தனர். இது குறித்து ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர்களிடம் கேட்டபோது, சாலை ஓரமாக மண் கொட்டவே மண் எடுத் துச் செல்வதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி கூறுகையில், அவிநாசி - மங்கலம் சாலையில் இருந்து வஞ்சி பாளையம் வரை எந்த இடத்திலும் மண் கொட்டப்பட்டதாக தெரிய வில்லை. அள்ளிச் சென்ற பல லோடு மண் எங்கு சென்றது. எடுத்து செல்லப் பட்ட மண் விற்பனை செய்யப்பட்டுள் ளதா? என மாவட்ட நிர்வாகம் விசா ரணை நடத்தி சட்ட ரீதியான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கேட்டபோது, மண்ணை வலித்து சாலையோ ரமாக கொட்டச் சொல்லி உத்தரவிட்டி ருந்தேன். வேறு இடத்திற்கு செல்வ தாக புகார் வந்ததைத் தொடர்ந்து எங்கள் அலுவலக ஊழியரை கண்கா ணிக்க அவ்விடத்திற்கு அனுப்பி வைத்து விட்டேன். இது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தால் குற்றம் செய்த நபருக்கு நெடுஞ்சா லைத்துறை துணை போகாது என தெரிவித்தார்.