திருப்பூர், மார்ச் 18- பாஜக ஆளும் மணிப்பூர் மோடி யின் குடும்பத்தில் உள்ளதா? இல் லையா? பாதிக்கப்பட்டுள்ள மணிப் பூர் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்பதை மோடி கூற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல் முருகன் கூறினார். கேத்தம்பாளையம் தியாகி ஆர். பன்னீர்செல்வத்தின் 26ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் போயம்பாளையம் பிரிவில் ஞாயி றன்று நடைபெற்றது. சிஐடியு நிர் வாகி எம்.என்.நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புரை யாற்றிய கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் கூறி யதாவது, ஒரு கம்யூனிஸ்ட்டை கொன்று விட்டால் கம்யூனிஸ்ட்டு கள் அழிந்து விடுவார்கள் என்று தப்பு கணக்குப் போடுகிறார்கள். உலகம் முழுவதும் பல ஆயிரம் கம்யூனிஸ்ட் களின் தியாகத்தால்தான் இன் றைக்கு தொழிலாளர்களுக்கு இத்த னை உரிமைகள் கிடைத்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெறும் தேர்தலாக கருதக் கூடாது. இந்த தேசத்தின் இரண்டாவது சுதந் திரப் போராட்டமாக கருத வேண் டும். 2014ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந் தால் வெளிநாடுகளில் இருக்கிற கருப்பு பணத்தை மீட்டு, இந்தியா வுக்கு கொண்டு வருவேன், ஆண் டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன், பெட் ரோல் டீசல் விலையைப் பாதியாக குறைப்பேன் என்று கூறி மோடி ஆட் சிக்கு வந்தார். வரும் 2024 தேர்த லில் 10 ஆண்டு சாதனைகளை கூறி வாக்கு கேட்பதற்கு மாறாக 2047இல் இந்தியா வல்லரசாகும் என்று கூறி வாக்கு கேட்கிறார். ஏனெனில் அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
மாறாக அனைத்து அத்தியாவ சிய பொருட்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள். குறிப்பாக 420 ரூபாய்க்கு விற்கப் பட்ட கேஸ் சிலிண்டரின் விலை இப் போது 1100க்கும் மேல் விற்கப்படுகி றது. மகளிர் தினத்தை முன்னிட்டு மக ளிர்களுக்கு பரிசாக கேஸ் சிலிண்ட ரின் விலை ரூ.100 குறைக்கிறோம் என்று வெட்கமே இல்லாமல் மோடி கூறுகிறார். 2022, 2021, 2020 ஆகிய ஆண்டுகளில் மகளிர் தினம் வரவில் லையா, ஏன் குறைக்கவில்லை? தேர் தலை ஒட்டி நீங்கள் இதை செய்கி றீர்கள் என்று மக்கள் அறிந்திருக்கி றார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல. அனைத்து அத்தியாவசிய பொருட்க ளுக்கும் பல மடங்கு விலை உயர்த் தப்பட்டுள்ளது. 25 கிலோ அரிசி சிற் பம் 1700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் அதை விதைக்கும் விவ சாயி பட்டினியில் வாழ்கிறார். குறைந் தபட்ச ஆதார விலையை நிர்ணயிக் காமல் உள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோல்டு வின்னர் ஆயில் ஜிஎஸ்டி வந்ததற்கு பின் 140 ரூபாய்க்கு விற்கப்படுகி றது. கோல்ட் வின்னர் நிர்வாகம் இப்போது அதானியிடம் போய்விட் டது. கொரோனா பேரிடரை காரணம் காட்டி கார்ப்பரேட்டுகளுக்கு ஐந்து சதவீதம் வரி குறைத்துள்ளனர். அத னால் பட்ஜெட்டில் ரூ.1.60 லட்சம் கோடி துண்டு விழுந்து விட்டதாக கூறி, அனைத்து அத்தியாவசிய உணவு தானிய பொருட்களின் மீதும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி ஏற்றி விட்ட னர். பால், தேநீர், இட்லி உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு மக்களை வறு மையில் தள்ளி உள்ளனர். ஆனால் தங்கம், வைரத்திற்கு மூன்று சதவீதம் தான் வரி. இதையெல்லாம் திசை திருப் பவே வெறுப்பு அரசியலை முன் வைத்து, ஒருபுறம் மக்களை மதவாத அடிப்படையில் பிரித்துவிட்டு, மறு புறம் பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானி போன்ற கார்ப்ப ரேட்டர்களும் கொடுத்து வருகிறார் கள். துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தும் விற்கப்பட்டு வருகிறது.
இங்கு போதைப் பொருள் குறித்து பேசுகிறார்கள். அவர்கள் ஆளும் குஜராத்தில் 2014க்கு முன்பு வரை 600 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. ஆனால் 2014க்கு பிறகு மட்டும் இது வரை 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி லான போதைப் பொருட்கள் கைப்பற் றப்பட்டுள்ளது. குறிப்பாக அதா னிக்கு சொந்தமான துறைமுகத்திலி ருந்து பெறுமளவில் கைப்பற்றப் பட்டு உள்ளது. ஊழலை சட்டபூர்வமாக அங்கீக ரிக்கும் வகையில் தேர்தல் பத்தி ரத்தை கொண்டு வந்தார்கள். அது எவ்வளவு பெரிய ஊழல் என்பதை உச்ச நீதிமன்றம் இப்போது சுட்டிக் காட்டி இருக்கிறது. இதுவரை ரூ.25 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்துள்ளனர். டெல்லியில் போரா டிய விவசாயிகளுக்கு அளித்த வாக் குறுதிப்படி விவசாய கடனை தள்ளு படி செய்ய மறுக்கிறார்கள். மத்திய அமைப்பான சிஐஜி ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. வெறும் 120 மில்லியனர்களுக் காக மட்டுமே இவர்கள் அரசாங் கத்தை நடத்தி வருகிறார்கள். 140 கோடி மக்களும் மோடியின் குடும்பம் என்று கூறுபவர்கள், கலவரங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் மணிப்பூர் மக்களை ஏன் சந்திக்க வில்லை. அவர்கள் மோடியின் குடும் பம் இல்லையா? டெல்லியில் போரா டிவரும் விவசாயிகள் மோடியின் குடும்பம் இல்லையா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். வரும் தேர் தலில் மக்கள் உங்களை தோற்கடிப் பார்கள். இந்தியா கூட்டணி மாபெ ரும் வெற்றிபெறும் என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துகண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, சிஐடியு பஞ் சாலை சங்க மாவட்டத் தலைவர் கே.பழனிசாமி, கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ஆ.சிகாமணி, வாலிபர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் சந் தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், குருவாயூரப்பன் நகர் கிளை செயலாளர் வி.செல்வகுமார் நன்றி கூறினார். முன்னதாக திருப்பூர் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமை வாலிபர் சங்க முன்னாள் மாநி லச் செயலாளர் ஆர்.வேல்முருகன் துவக்கி வைத்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, பனியன் சங்க மாவட்ட பொதுச் செய லாளர் ஜி.சம்பத், நிர்வாகிகள் செல்வம், மாணிக்கம், வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ரேவந்த் குமார்,சந்தோஷ், நரேந்திர பிரசாத், பாலாஜி மாணவர் சங்க நிர்வாகி சுஜித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.