அவிநாசி, நவ.3 - திருமுருகன்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் இல்லத் தில் முறைகேடான குடிநீர் இணைப்பை கண்டறிந்து நக ராட்சி நிர்வாகம் துண்டித் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமுருகன்பூண்டி நக ராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் முறை கேடான குடிநீர் இணைப்பு குறித்து நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக இயக்கம் நடத்தி வருகிறது. பேரூராட்சி நிர்வாகமாக செயல்பட்ட போது, செயல் அலுவ லர்கள் குடிநீர் இணைப்புகளை கட்டணம் செலுத்தி முறைப் படுத்த கோரி அறிவிப்பு வெளியிட்டு, இதன் மூலமாக நகராட்சி நிர்வாகத்திற்கு மட்டும் பல லட்சம் ரூபாய் வருவாய் பெற் றது. இச்சூழலில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் இல்லத்தில் முறைகேடான குடிநீர் இணைப்பு, கொடுக்கப்பட்டிருந்த போது பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இணைப்பு கொடுப்பதை நிறுத்தம் செய்தனர். இதனை யடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அப்பொழுது 22 ஆவது வார்டு பகுதி ரிங் ரோட்டில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். மேலும், முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்து உள் ளாட்சி நடுவர் மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் விசார ணையில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கியதை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், நக ராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை முதல் முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறியும் பணிகள் செய்து வருகின்ற னர். இதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதில், திமுகவைச் சேர்ந்த 7 வது வார்டு நகர மன்ற உறுப்பி னர் முருகசாமி இல்லத்தின் முறைகேடான குடிநீர் இணைப்பு கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.