மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
தருமபுரி, அக்.6- தருமபுரி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளை யாட்டு அரங்கில் வியாழனன்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்து, ஒலிம்பிக் சுடர் ஏற்றியும், வண்ண வண்ண பலூன்கள் பறக்க விட்டும் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதன்பின் சரக அளவில் போட்டியிடும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செல்வ மாளிகை நிர்வாகி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். வருவாய் மாவட்ட அளவில் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு ஏறிதல், ஈட்டி எறி தல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன. இதில் சரக அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனி யார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 ஆவது நாளாக வெள்ளி யன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தண்டவாளத்தின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள்
கோவை, அக்.6- மதுக்கரை அருகே ரயில் மோதி யானை கள் பலியாவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு கம்பிகள் மூலம் தடுப்புகள் அமைக் கப்பட்ட உள்ளது. கோவை புறநகர் பகுதியான மதுக்கரை பகுதி, கேரளம் – தமிழ்நாடு ஆகிய மாநி லங்களை இணைக்கும் வனப்பகுதியாக உள் ளது. இந்த வனப்பகுதி வழியாக கேரளம் – தமிழ்நாட்டை இணைக்கும் ரயில் தண்டவா ளம் செல்கிறது. மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரயில்வே தண்டவாளங் கள் உயரமாக இருப்பதால், வனப்பகுதி யில் இருந்து வரும் யானைகள் தண்ட வாளங்கள் மீது ஏறி கடந்து செல்கிறது. ரயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவா ளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக் கப்பட்டு உள்ளது. இதன்படி மதுக்கரை வனச் சரகத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத் தின் கீழ் பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக் கப்பட்டு உள்ளது. இதன் வழியாக யானை கள் எளிதாக கடந்து செல்கின்றன. இந்த திட்டம் வெற்றி பெற்றால். மற்றொரு சுரங் கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டு யானைகளின் நடமாட்டம் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவ சாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து வர வேண்டியது உள்ளது. எனவே, யானை கள் தண்டவாளத்தை கடந்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை வரை மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகு தியை ஒட்டிய இடத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப் பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே, புதிதாக தடுப்புகள் அமைப்ப தற்கு எவ்வளவு செலவாகும் என அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். தமிழ்நாடு அர சின் உத்தரவு வந்தவுடன் நிதி ஒதுக்கப்பட்ட தும், இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும், என்றனர்.
அவிநாசி வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு: ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முடிவு
அவிநாசி, செப். 6 – அவிநாசி அடுத்து சேவூர் அருகே சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் ஜெயின் கம் பெனி மூலம் பல லட்சம் மதிப்பிலான வாழை கள் சேதமடைந்தது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம் தண்டுக்காரன்பா ளையம் ஊராட்சி, ராமியம்பாளையம், குமார பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆத ராம்பாளையம் உட்பட்ட பகுதிகளில் ஆயி ரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். அப்பகுதி விவசாயிகள் 2022 ஆம் வருடத் தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெயின் கம்பெனியில் இருந்து வாழைகன்று கள் விலை கொடுத்து வாங்கி பயிரிட்டனர். 13 மாதம் ஆகியும் வாழை மரங்களில் வாழைத்தார் வளர்ச்சி அடையவில்லை. இத னால் ரூ.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட் டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிக்கும், கிராம நிர் வாக அலுவலர் உள்ளிட்டவர்களுக்கும் தக வல் தெரிவித்துள்ளனர். இத்தகவலை அடுத்து அவிநாசி வட்டாட்சியர் மோகனன், சேதமடைந்த வாழைகளைப் பார்வையிட் டார். வெள்ளியன்று வாழைக்கன்று வழங் கிய நிறுவனத்தினரையும், விவசாயிகளை யும் அழைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். அதன் அடிப்படையில், வெள்ளியன்று இப்பேச்சுவார்த்தை அவிநாசி வட்டாட்சியர் மோகனன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கோவை வேளாண்துறை அரசு அதிகாரிகள் உள்ளிட் டோர் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சிய ருக்கு அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய் துள்ளனர். எனினும் பாதிப்பின் தன்மையை உணர்ந்து, இதற்கு முன்னதாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
திருப்பூர், அக். 6- காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியை பத்து தலை ராவ ணனைப் போல் சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்ட மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண் டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கோபி தலைமையில் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு இப்போராட்டம் நடைபெற் றது. இதில் காங்கிரஸ் மாநில செயலாளர் செல்வகுமார் உள்பட வட்டார தலைவர்கள், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அதேபோல் திருப்பூர் மாநகர காங்கிரஸ் கட்சியி னர் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை யில் பாரதிய ஜனதா கட்சியின் இழிவான செயலைக் கண்டித்து தனியாக போராட்டம் நடத்தினர்.
அக்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை
திருப்பூர், அக். 6 - அக்டோபர் 30ஆம் தேதிக்குள் அரையாண்டு சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவிகிதம் ஊக்கத் தொகை, அதிகபட் சம் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பவன்குமார் தெரிவித்துள்ளார். சொத்து உரிமையாளர்கள் தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலங்க ளில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள், ஆகிய வற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரை வோலை மூலமாகவும், திருப்பூர் மாநகராட்சி இணையதளம், நீஃப்ட், ஆர்டிஜிஎஸ் ஆகியவற்றின் மூலமும் டிஜிட்டல் பரி வர்த்ததனை வாயிலாக சொத்துவரி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோழர் கே.எஸ்.கே. என்றதுமே ஒரு சக்தி பிறக்குதம்மா!
தோழர் கே.எஸ்.கே என்று அனை வராலும் அன்போடு அழைக்கப்படும் கே.எஸ்.கருப்பசாமி அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் (அக்.7) இன்று. தனது கடைசி காலத்தில் தொண்டைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டபோதும் அவருக்கே உரிய இயல்போடு, துணிவுடன் நோயை எதிர்த்துப் போராடி மர ணத்தைத் தள்ளிப் போட்டவர். திருப்பூர் மண்ணின் செங்கொடி இயக்கப் போராட்ட வரலாற்றில் கே. எஸ்.கே. என்ற பெயர் தனிச்சிறப்பாக பதிக்கப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் உழைப்பாளிகளின் நெஞ்சங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கே.எஸ்.கருப்பசாமி சிறு வயதில் கோவைக்குச் சென்று டெக்ஸ்டூல் நிறுவனத்தில் வேலை செய்தவர். அங்கே தொழிற்சங்க இயக்கத்தில் பங்கேற்று துடிப்புடன் செயல்பட் டதால் பழிவாங்கப்பட்டவர். தோழர் கே.ரமணி உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலில் தொழிற்சங்க ஊழியராக தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டவர். பிற்பாடு திருப்பூருக்கு வந்து, இங்கு அனைத்துப் பகுதி தொழி லாளர்களை அணிதிரட்டுவதில் தீவி ரமாக செயல்பட்டார். லாரி ஓட்டுநர் கள், சாக்குத் தொழிலாளர்கள், மாட் டுவண்டி தொழிலாளர்கள், சுமைப் பணி தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் என தொழிலாளி வர்க்கத்தை சங்கமாக அணிதிரட்டு வதில் முன்னணி களப்பணியாளராக திகழ்ந்தார். அத்துடன் சமூக ஒடுக்குமுறை, காவல் துறை அராஜகம் போன்ற வற்றை எதிர்த்து களத்தில் நின்று போராடக்கூடியவர். தொழிலாளர் களின் நம்பிக்கைக்குப் பாத்திரமா னவர். அவர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடியவர். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை, போராட்டக் களத்தில் இருக்கக்கூடியவர்களை ஈர்க்கக்கூ டியது அவரது பேச்சு. திரைப்படங் கள், சாமானிய மக்களின் பழக்க வழக்கம், பண்பாட்டு அம்சங்களை பாமரர்களும் கேட்டுப் புரிந்து கொள் ளும் வகையில், நகைச்சுவையாக வும், அதே சமயம் போராட்ட உணர்வு ஊட்டக்கூடியதாகவும் இருக்கும் அவரது பேச்சு என்று மூத்த தலை முறையினர் சொல்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் பிரதேசக் கமிட்டி செயலாளராக செயல்பட்டவர். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி இருக் கிறார். நேரம் தவறாமை அவரது முக் கியமான பண்பு. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். ஏமாற்றுத்தனம், போலித்தனம், பகட்டு ஆகியவற்றை தனது எள் ளல் பேச்சில் தோலுரித்து விடுவார். அவர் மரணமடைந்து அவரது உடல் மார்க்சிஸ்ட் கட்சி அலுவ லகத்தில் வைக்கப்பட்டபோது, அஞ் சலி செலுத்த வந்த கூட்டம் அவர் வாழ்ந்த கம்யூனிஸ்ட் வாழ்க்கைக்கு சாட்சியாகத் திகழ்ந்தது. பரம ஏழை கள், கிழிசல் உடை உடுத்திய தொழி லாளர்கள், பெண்கள் என ஆயிரக்க ணக்கில் வந்து கண்ணீர் மல்க அஞ் சலி செலுத்தினர். இன்றைய இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் அவர் வரலாற்றை படித்தறிய வேண்டும். அவர் ஒரு தீப்பொறி! ஆம், இன்றும் பெரு நெருப்பைப் பற்ற வைக்கும் தீப் பொறி தோழர் கே.எஸ்.கே! -வே.தூயவன்
அபாய சாலையில் அதிவேக இயக்கம் 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
உதகை, அக்.6- கல்லட்டி மலைபாதையில் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக ஜீப்பை இயக்கி சென்ற வீடியோ இணையத் தில் வைரலான நிலையில், மூன்று ஓட்டுனர்களுக்கு புதுமந்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகளிலேயே கல்லட்டி மலைப்பாதை மிகவும் செங்குத்தாகவும், அதிக வளைவு களை கொண்ட அபாயகரமான சாலையாக காணப்படுகிறது. உதகையில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்வதை காட்டிலும் மசினகுடி - கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்வதால் நேரம் மற்றும் தூரம் குறைவு என்பதால், பெரும்பாலானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் 12 கி.மீ., தூரம் வரை அபாயகரமான மற்றும் மிகவும் குறுகிய 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. செங்குத்தாக உள்ள இச்சாலையில் விபத்துகளை குறைக் கும் வகையில், ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளிலும் அபாயகரமான இடங்களில் இரும்பு தடுப்புகள், வேகதடை கள், வளைவுகளில் எதிரே வரும் வாகனம் தொியும் வண்ணம் கான்வெக்ஸ் கண்ணாடிகள் போன்றவைகள் அமைக்கப்பட் டுள்ளன. இது தவிர இச்சாலையில் சரிவாக கீழ் நோக்கி செல்லும் போது கண்டிப்பாக இரண்டாவது கியரில்தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை பலகை களும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், உள்ளூர் வாக னங்கள் தவிர்த்து, வெளியூர் மற்றும் வெளி மாநில வாகனங் கள் உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மசினகுடியில் இருந்து உதகை வர மட்டும் அனுமதிக்கப்படு கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இச் சாலையில் ஏக்குணி என்ற பகுதியில் 3 ஜீப்புகள் போட்டி போட்டு கொண்டு அசுர வேகத்தில் இயக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உள்ளூர் வாகன ஓட்டிகளே அத்துமீறி சென்றுள்ளனர் என பலரிடையே கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி தலைமை யிலான போலீசார் மசினகுடியில் இயங்கும் 10 ஜீப் ஓட்டு நர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் அதி வேக மாக ஜீப் ஓட்டியதாக 3 ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உதகை 200 – இலக்கிய விழா
உதகை, அக்.6- உதகை 200 ஆவது ஆண்டை பெருமை சேர்க்கும் வகை யில் நீலகிரியின் இலக்கியம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் 7ஆவது இலக்கிய விழா துவங்கியது. இதில், எழுத்தாளர் பெருமாள் முருக னுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌர விக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் 7ஆவது இலக்கிய விழா நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை நூலகத்தில் துவங்கி யது. ஊட்டியின் 200 ஆவது ஆண்டு விழாவை பெருமை சேர்க்கும் வகையில் இலக்கியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை செழுமை மிக்க வண்ண மயமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடை பெறும் இவ்விழாவில் சிறந்த எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. இவ்விழாவில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலின் முக்கி யத்துவத்தையும் பல்வேறு சமூகங்களை விளக்கும் வகையி லும், இயற்கை வளங்களின் சிறப்புகள் குறித்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் அறிவு சார்ந்த விவாதங்கள், நேரடி உரை யாடல்கள், கண்காட்சிகள் கலை விளக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நிகழ்வில், திரைத்துறையை சார்ந்த எழுத் தாளர்கள், மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்களும், வெளிநாட்டு எழுத்தாளர்களும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் இந்த இலக்கிய விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி விஜயகுமார், மாவட்ட வருவாய் கோட்டாட் சியர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
உழவர் சந்தையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
தருமபுரி, அக்.6- தருமபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி உழவர் சந்தைக்கு நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்க ளும், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும் வந்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தை யில் பொதுமக்களின் செல்போன்கள் அடிக் கடி திருட்டு போனது. இதனால் உழவர் சந்தை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வேளாண் விற் பனை வணிகத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தருமபுரி உழவர் சந்தை யில் வியாழனன்று மாலை திடீர் ஆய்வு செய் தார். அப்போது, பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், கழிப்பறைகள் மற்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவ சாயிகள் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் தராசை ஆய்வு செய்த அவர் மாலை நேரத்தில் விற் பனை செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகளையும் பார்வை யிட்டார். மேலும், மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமானதாக உள் ளதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார். இதன்பின் நிர்வாக அலுவலகத்தில் பதிவேடு களை பார்வையிட்ட அவர், தருமபுரி உழவர் சந்தையில் செல்போன் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி நிர்வாக அலுவலர் மூர்த்தி ஆகி யோர் உடனிருந்தனர்.
அதிமுக தொண்டர் சாலையில் உருண்டு போராட்டம்
நாமக்கல், அக்.6- “கட்சிக்காக பலமுறை சிறை சென்றும், தனக்கு எந்தவித உதவியும் கிடைக்க வில்லை” எனக்கூறி நாமக்கல்லில் அதிமுக தொண்டர் ஒருவர் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ராஜராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. தீவிர அதிமுக தொண் டரான இவர், கட்சிப்பணியில் அதிகளவில் ஈடு பாடு கொண்டதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் அதிமுக நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும், அங்கு சென்று கலந்து கொண்டு வந்ததால் கடன் சுமை ஏற்பட்டது. குடியிருந்த சொந்த வீட்டினை விற்று பெற்றக் கடன் தொகையை செலுத்திய நிலையில், தற் பொழுது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கட்சியில் மட்டம் கவனம் செலுத்திய தால், குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நி லையில், குடிபோதையில் “தான் கட்சிக்காக பாடுபட்டு, பலமுறை சிறைக்குச் சென்றும், இதுவரை கட்சி தன்னை கண்டு கொள்ள வில்லை” எனக்கூறி குமாரபாளையம் - எடப் பாடி சாலையில் திடீரென உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
வெண்டைக்காய் விலை உயர்வு
சேலம், அக்.6- சேலம் மாவட்டம் தேவூர், மூலப்பாதை, வெள்ளாளபாளையம், சுண்ணாம்புக்கரட் டூர், ஒடசக்கரை, சோளக்கவுண்டனூர், பொன் னம்பாளையம், கொட்டாயூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயி கள் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர். அவ் வாறு சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக் காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக் கின்றனர். அங்கு தரம் பிரிக்கப்பட்டு கொச்சி, திருவனந்தபுரம், விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேவூர் பகுதி யில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கடந்த ஒரு மாதங்களாக வெண்டைக்காய் களை ஒரு கிலோ ரூ.4க்கும் குறைவாக வாங்கி சென்றனர். இந்நிலையில், புதனன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.14க்கு வியாபாரிகள் வாங்கி சென்ற னர்.