அறிவியல் ஆய்வு போட்டியில் பங்கேற்க அழைப்பு
கோவை, நவ.2- அறிவியல் ஆய்வு போட்டிகளில் பங் கேற்க மாணவர்களுக்கு இந்திய அரசின் அறி வியல் தொழில்நுட்பதுறை அழைப்பு விடுத் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் கோவை மாவட்ட தலைவர் பி.ஆர். ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இந்திய அரசின் அறி வியல் தொழில்நுட்பத்துறை பல்லாண்டு களாக மாணவர்களிடம் பல்வேறு பணிகளை திறம்பட செய்து வருகிறது. இதில், முதன்மை யானது. குழந்தைகள் ஆய்வு போட்டிகள். அதை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்பர். இதில் உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி, மாணவ, மாணவிகள் பங்கேற் கலாம். இவர்கள் ஒரு ஆய்வு தலைப்பை தேர்வு செய்து, மூன்று மாத காலம் ஆய்வு செய்வர். இந்த ஆய்வு ஏடுகள், மாவட்ட, மாநில, தேசிய அளவில் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மட்டத்திலும் தேர்வானவர் கள் அடுத்த மட்டத்திற்கு செல்வர், அந்த ஆய்வு ஏடுகளை, சமர்பிக்கும் அனைவருக் கும், இந்திய அரசின் முத்திரை உள்ள சான்றி தழ்கள் வழங்கப்படும். இந்த போட்டிகளை தமிழ்நாட்டில், தமிழ்நாடு அறிவியல் இயக் கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள், கூடுதல் விபரங்களுக்கு www.tnsf.co.in, மற்றும் ரிஷி சரவணன் மண்டல ஒருங்கினைப் பாளர் 79044 55681 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி கோழிப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
கோவை, நவ.2- கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதி ரொலியாக கோவையிலுள்ள கோழிப்பண் ணைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனை யில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியா னது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை - கேரள எல்லைகளான வாளை யாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உட்பட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை மருத்து வர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோவை யில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கண் காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகம் - கேரள மாநில எல்லையையொட்டியுள்ள பொள்ளாச்சி பகுதி சோதனைச்சாவடிகளில் கால்நடை பராம ரிப்புத் துறை மருத்துவர்கள் அடங்கிய குழு வினர் கேரளாவிலிருந்து வரும் வாகனங்க ளின் டயர்களில் கிருமிநாசினி தெளித்த பின்னர் தமிழக எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை யினர் கூறுகையில், பறவை காய்ச்சலால் கேர ளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத் தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தமிழகம் - கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர், என்றனர்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் வாடகை நிலுவையை வசூலிப்பதில் உதகை நகராட்சி தீவிரம்
உதகை, நவ.2- நகராட்சி ஊழியர்களுக்கு ஊதி யம் வழங்குவதேற்கே பணம் இல்லாததால் உதகை நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு நிலுவை தொகையை வசூலிக்க தீவிரப்படுத் தப்பட்டு வருகிறது. உதகை நகராட்சிக்குட்பட்ட மார்க் கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகு திகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சு வார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத் தாமல் இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூ.40 கோடி செலுத்தாத தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து அதி ரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு சிலர் முழு தொகையையும், ஒரு சிலர் பாதித்தொகையையும் செலுத்தி யதை தொடர்ந்து சீல்கள் அகற்றப் பட்டன. இதன்பின் வாடகை செலுத்தா மல் இருந்த கடைகளுக்கு அதிகாரி கள் நோட்டீஸ் வழங்கினர்.
அத்துடன் வாடகை செலுத்த காலக்கெடுவும் வழங்கப்பட்டது. ஆனாலும், வாட கையை செலுத்தவில்லை என்று கூறப் படுகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தர வின்பேரில் அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக் கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்படி செவ்வாயன்று இறைச்சி, பேன்சி, மளிகை கடைகள் உட்பட 15 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட் டது. அந்த கடைகள் முன்பு நோட்டீ சும் ஒட்டப்பட்டது. அப்போது அதி காரிகளுடன் ஒரு சில கடைக்காரர் கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒரு சில கடைக்காரர்கள் உட னடியாக பணம் செலுத்த சென்ற னர். இதுகுறித்து நகராட்சி ஆணையா ளர் காந்திராஜன் கூறுகையில், நக ராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொகையை செலுத்த வேண் டும். கடந்த ஆண்டு முதல் மேற் கொள்ளப்பட்ட சீல் நடவடிக்கையை தொடர்ந்து ரூ.40 கோடி பாக்கியில் தற்போது வரை ரூ.19 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. நகராட்சி நிர்வா கம் சார்பில் மின்கட்டணம் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் பாக்கி வைக் கப்பட்டு உள்ளது. மேலும், ஊழியர் களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக் கல் நிலவுகிறது. எனவே, மீதமுள்ள நிலுவை தொகையை வசூலித்தால் தான் நகராட்சி நிர்வாக பணிகளை தொய்வின்றி செயல்படுத்த முடி யும், என்றார்.
தொடர் திருட்டு: வாலிபர்கள் கைது
இளம்பிள்ளை, நவ.2- மகுடஞ்சாவடி போலீசார் பழைய சந்தைப்பேட்டை பகு தியில் ரோந்து சென்றபோது, அதிவேகமாக வாகனத்தை இயக்கிவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில், பட்டதாரிகளான எடப்பாடி, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், இவரது நண்பர் தனபால் என தெரிய வந்தது. இருவரும் மகுடஞ் சாவடி பகுதியில் வழிப்பறி மற்றும் ஜெய்புரி விதி முரளி என்பவர் வீட்டில் 5 பவுன் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். இதன்பின் அவர் கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் நாளை உடல்நலம் குறித்து கலந்துரையாடல்
திருப்பூர், நவ. 2 - திருப்பூரில் உடல்நலம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 4) நடை பெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சி யில் எலும்பு முறிவு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே.சுந்தரமூர்த்தி பங்கேற்று உடல் நலனைப் பேணு வது குறித்து உரையாற்றுகிறார். இதில் பார்வையாளர்க ளின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிக்க இருக் கிறார். மருத்துவ விழிப்புணர்வு பெறும் நோக்கத்தில் நடத்தப் படும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளோர் பங்கேற்று பயனடை யும்படி கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கொள்ளை வழக்கில் சிக்கியவர் கொலை வழக்கிலும் தொடர்பு
திருப்பூர், நவ. 2 – திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக் குள் கிரைண்டர் எனப்படும் செயலி மூலம் கொள்ளைச் சம்ப வத்தில் ஈடுபட்டவருக்கு, வேறொரு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதை காவல் துறையினர் துப்பு துலக்கி னர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிரைண்டர் என்ற செயலி மூலம் ஆசை வார்த்தை காட்டி சூலூர் காடம்பா டியைச் சேர்ந்த ந.கணேஷ்குமார் என்பவரை கொத்துமுட்டி பாளையம் பகுதிக்கு வரவழைத்து, ஆறு பேர் கொண்ட கும் பல், கத்தியை காட்டி மிரட்டி இரு சக்கர வாகனம், செல்போன், வெள்ளி சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை கொள்ளைய டித்துக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து கணேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு வினர் விசாரணை செய்து உ.பாலச்சந்தர் (35), வீ.குமார் (30), பூ.நாகராஜ் (23), அ.மணிகண்டன் (32), பி.வசந்த் (22), பா.பிர வீன் (21) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், கிரைண்டர் என்ற செயலி மூலம் நண்பர்களாகப் பழகி வரவழைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிப்பதாக உ.பாலச்சந்தர் தெரி வித்தார். மேலும் சாமளாபுரம் அருகே கோம்பக்காடு என்ற இடத் தில் தங்கி விறகு வேலை செய்து வருவதாகவும், ஏற்கெனவே தனக்கு நண்பரான, கழுகுமலையைச் சேர்ந்த ரஞ்சித், அவரது நண்பர் கார்த்திக் என்பவரை உடன் தங்க வைத்திருந்த போது, அவர் ரஞ்சித்தின் மனைவியை தவறான நோக்கத்தில் பார்ப்பதாகவும், ஆகையால் அவரை அடித்துக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த மே 13 அன்று பள்ளிபாளையம் வள்ளலார் பள்ளி அருகில் வரவழைத்து கொத்துமுட்டிபாளையம் சோத்துப் பாறை நடராஜ் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி அரு கில் கூட்டிச் சென்று மூன்று பேர் சேர்ந்து கார்த்திக்கை அடித் துக் கொலை செய்ததாக தெரிவித்தனர். அத்துடன் அவரது கை, கால்களில் துணியால் கட்டி கல்குவாரியில் தூக்கிப் போட்டுவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் மூலம் செம்மிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. இறந்தவர் கார்த்திக் என்பதும், அவரை பாலச்சந்தர், மாலிக் பாட்சா மற்றும் ரஞ்சித் மூவர் கூட்டாக அடித்துக் கொலை செய்து கல்குவாரியில் போட்டு மறைத்தனர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாலிக் பாட்சாவை காவல்துறையினர் கைது செய்தனர். தலை மறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்
திருப்பூர், நவ. 2 – மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் கொத்தனராக வேலை செய்து வந்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த அருஞ்சுனை முத்து (22) என்பவர் சித்தாளாக வேலை செய்தார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மல்லே கவுண்டன்பாளையத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2020 பிப்ரவரி 23 அன்று அருஞ்சுனை முத்து, கீழே கிடந்த கல்லை எடுத்து முருகனை தாக்கி கொலை செய்தார்.காமநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அருஞ்சுனை முத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக் கில் புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக் காக அருஞ்சுனை முத்துவுக்கு ஆயுள் தண்டனை,ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.
போராட்டம் நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி
திருப்பூர், நவ. 2 - திருப்பூர் மங்கலம் சாலையில் போரட்டம் நடத் துவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தனியார் வணிக நிறுவ னங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசா ரித்த சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ் ணகுமார் அமர்வு, அரசு வழக் கறிஞர் முன்வைத்த வாதத் தின் அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இ வே பில்: நடைமுறையை எளிமைப்படுத்த டீமா கோரிக்கை
திருப்பூர், நவ. 2 - திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இ வே பில் நடைமுறையை எளிமைப்ப டுத்த வேண்டும் என்று டீமா சங்கம் கோரி யுள்ளது. இது தொடர்பாக மாநில வரிகள் பிரிவு இணை ஆணையருக்கு டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் புதன்கி ழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது: திருப்பூர் பின்னலாடை தொழிலில் 90 சதவிகிதம் இருக்கும் சிறு, குறு நடுத் தர உற்பத்தியாளர்கள் தங்களது தயா ரிப்பிற்கு ஜாப் ஒர்க் தொழில் கூடங் களை நம்பி உள்ளனர். திருப்பூர் சுற்று வட்டத்தில் சுமார் 15 கி.மீட்டர் அளவில் இந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஓரு பின்னலாடை உருவாக அது சுமார் 7 தொழில் கூடங்களைக் கடந்து வர வேண்டும். அனைத்து செயல்களுக் கும் ஆவணங்களைக் கையாள்வது நடைமுறையில் சிறு, குறு பிரிவின ருக்கு சற்று கடினம். நூல் விலை ஏற்றம், பெருந்தொற்று, ஜிஎஸ்டி, பண மதிப்பி ழப்பு, மின் கட்டண உயர்வு போன்ற கார ணங்களால் 70 சதவிகிதம் தொழிற்சா லைகள் நலிவடைந்து மூடப்பட்டு விட் டன. மீதியுள்ள 30 சதவிகித நிறுவனங் கள் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கின் றன. இவ்வளவு கஷ்டத்திற்கு இடையில் தொழில் நடத்துவோருக்கு, மேலும் ஒரு அழுத்தம் தரும்படி வாகன சோதனை செய்து ஆவணங்கள் சரி பார்ப்பது, அது வும் குறிப்பாக டிஜிட்டல் ஆவணங் கள் கேட்பது தொழில் துறையினருக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்து கிறது. எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு திருப்பூருக்கு ஏற்றவாறு ஆவண சோதனை, ஆவணங்களை எளி மைப்படுத்தும்படி கேட்டுக் கொள்வ தாக முத்துரத்தினம் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கு உதவி
திருப்பூர், நவ. 2 – திருப்பூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவைத்துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சமும் வழங் கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள் ளார் இந்த திட்டத்தில் சொந்த முதலீடு 10 சதவிகிதமாக இருக்க வேண்டும், பொதுப் பிரிவினருக்கு நகர்ப்புறத்தில் 15 சதவிகி தமும், கிராமப்புறத்தில் 25 சதவிகிதமும் மானியம் வழங்கப் படும். இதர பிரிவினருக்கு நகர்ப்புறத்தில் 25 சதவீதமும் கிராமப் புறத்தில் 35 சதவீதமும் மானியம் வழங்கப்படும். இவர்க ளுக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் சொந்த முதலீட்டாக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், திருப்பூர் 0421- 2475007 மற்றும் 89255 34021 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை
உதகை, நவ.2- சேரம்பாடி அருகே 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், சேரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் திரா விடமணி (54). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதி யிலுள்ள 9 மற்றும் 12 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்களுக்கு இனிப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பாக்கு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுவர்கள் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரி வித்துள்ளனர். இதையடுத்து சேரம்பாடி காவல் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் 2019 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திராவிடமணியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கின் விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றச்சாட்டு உறுதியானதால், முதியவர் திரா விடமணிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயி ரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் திராவிட மணியை சிறையில் அடைத்தனர்.
ஒன்றிய அரசின் திட்டங்கள் புரியவில்லை
சேலம், நவ.2- ஒன்றிய அரசின் திட்டங்கள் எதுவும் புரியவில்லை என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். உள்ளாட்சி தினமாக செவ்வாயன்று தமிழக முழுவ தும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் காரைக்காடு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவித்த நிலையில், திட்டங்கள் எதுவும் புரியவில்லை என்று அதிகாரியிடம் மாறி மாறி பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அதிகாரிகள் என்ன செய்வ தென்றே தெரியாமல் விழித்தனர். பின்னர், ஏதோ சொல்லி சமாளித்தனர். இதனையடுத்து, கால்நடைகள் வளர்ப்பு குறித் தும்,கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய், பூச்சி தாக்கு தல் உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாப்பு குறித்த கருத்துக் களை மருத்துவர்கள் விளக்கி கூறினர்.
மாதர் சங்க ஆனைமலை தாலுகா கமிட்டி அமைப்பு
கோவை, நவ.2- ஆனைமலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவை கூட்டத்தில் புதிய தாலுகாக்குழு அமைக் கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். ஆனைமலை வேட்டைக்காரன் புதூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆனைமலை தாலுகா அமைப்புக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.ஜோதிமணி, மாவட்ட செயலாளர் சுதா ஆகியோர் பங் கேற்று மாதர் சங்கத்தின் இயக்க நட வடிக்கைகள் குறித்து உரையாற்றி னர். முன்னதாக அமைப்புக்குழு கூட் டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பரமசிவம், ஒன் றியக்குழு உறுப்பினர் பி.பி. மகேந்தி ரன், ஆர். தங்கவேல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில், மாதர் சங்கத்தின் ஆனைமலை வட்டார ஒருங்கிணைப்பா ளராக ஷகிலா பாணு தேர்வு செய்யப் பட்டார். இக்கூட்டத்தில் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட காளியாபுரம், புளியங்கண்டி, வேட்டைகாரன்புதூர், சூளேஸ்வரன்பட்டி, தம்மம்பதி, ஒட்டக் கரடு, டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்ற னர்.
அசாம் மாநிலத்திற்கு சிறப்பு ரயில்
கோவை, நவ.2- நவ.6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியிலிருந்து கோவை வழியாக அசாம் மாநிலம், திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியா குமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக் குப் புறப்படும் ரயில் (எண்:05905), புதனன்று இரவு 8.50க்கு திப்ருகரை சென்றடையும். இதேபோன்று செவ்வாய்க் கிழமைகளில், திப்ருகரிலிருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 05906) வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கன் னியாகுமரி சென்றடையும். திப்ருகரிலிருந்து நவ.8, 15 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயி லில் ஏசி, இரண்டடுக்கு ஒன்று, மூன்றடுக்கு 5, படுக்கை வசதி 11, பொது இரண்டாம் வகுப்பு 3, சரக்கு பெட்டி 1 என 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வாலிபர் தற்கொலை
ஈரோடு, நவ.2- அந்தியூர் வட்டம், அட்ட வணைப்புதூரைச் சேர்ந்த வர் சௌந்திரராஜன். இவ ருக்கு திருமணமாகி 8 வய தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கடன் பிரச்சனை காரணமாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நி லையில் அக்.27 ஆம் தேதி யன்று சௌந்தரராஜன் களைக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள் ளார். இதையடுத்து உறவி னர்கள் அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சௌந்தரராஜன் உயிரிழந் தார்.