districts

img

படைவீடு பேரூராட்சி: சிபிஎம் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாமக்கல், பிப்.11- படைவீடு பேரூராட்சியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறி முக கூட்டம் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், படைவீடு பேரூராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் 3 ஆவது வார்டில் போட்டியிடும் அ.தனலட்சுமி, 4 ஆவது வார்டு த.மகேஸ் வரி, 5 ஆவது வார்டு வி.சரஸ்வதி , 6 ஆவது எஸ்.சந்திர மதி, 11 ஆவது வார்டு துரைசாமி மற்றும் 1 ஆவது வார்டு ரவி (எ) க.தர்மலிங்கம், 8 ஆவது வார்டு  பெ.சண் முகம் ஆகியோரை அறிமுகப்படுத்தி உரையாற்றி னர்.  முன்னதாக, இந்த கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் எம். மணிகண்டன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பி.பெருமாள், ஏ.டி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் டி.சரவணன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.