திருப்பூர், நவ. 7 - திருப்பூர் தோழர் கே.தங்கவேல் நினைவு நூலகத்தில் வாசிப்பு வட்டம் நான்காவது அமர்வு ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் பண்பாட்டு ஆய்வாளர் எழுத்தாளர் தொ.பரமசி வன் எழுதிய அறியப்படாத தமிழகம் என்ற புத்தக அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அமர்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் செ.முத்துக்கண் ணன், எஸ்.சுப்ரமணியன், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாண வர்கள் பங்கேற்றனர்.