அவிநாசி,பிப்.8- திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி உள் ளிட்ட இடங்களில் திமுக மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி யின் வேட்பாளரை திங்களன்று செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிமுகம் செய்து வைத்தார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ர வரி 19 ஆம் தேதி நடைபெற உள் ளது. இந்நிலையில் திருமுருகன் பூண்டி நகராட்சியில் உள்ள 27 வார்டு மற்றும் அவிநாசி பேரூராட் சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10,11,16, 14,22 ஆகிய 5 வார்டுகளிலும், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி 1,15,17,19, 20,24 ஆகிய 6 வார்டுகளிலும், திரா விட முன்னேற்றக் கழகம் 2,4,5, 6,7,8,9,26,25,23,21,27,18,13,12 ஆகிய 16 வார்டுகளிலும் போட்டி யிடுகின்றனர். இதேபோல் அவி நாசி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12வது வார்டி லும், காங்கிரஸ் கட்சி 8,13,14,16 ஆகிய நான்கு வார்டுகளிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி 5வது வார்டிலும், திராவிட முன் னேற்றக் கழகம் 1,2,3,4,6,7,8,9, 10,11,17,18 ஆகிய 12 வார்டுகளி லும் போட்டியிடுகிறது. இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு சார்பில் போட்டியி டும் வேட்பாளர்களை செய்தி மக் கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திமுகவின் மக்கள் நல திட்டங்களை மக்களி டம் எடுத்து கூறி வேட்பாளர்கள் வாக்கு சேகரியுங்கள் என்று கூறினார். இந்த கூட்டத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேள னத்தின் மாநில தலைவர் பி.முத்து சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய செய லாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட் டக் குழு உறுப்பினர் எஸ்.வெங்க டாசலம், ஒன்றியக்குழு உறுப்பி னர் தேவி, வேலுச்சாமி, பாலசுப்பி ரமணி, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொறுப்பாளர் பத்மநா பன், திருமுருகன்பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, நகர பொறுப்பாளர் நிர்வாகி பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி உட்பட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.