districts

img

அதிமுக - பாஜகவுக்கு தோல்வி உறுதி

கோயம்புத்தூர், பிப்.3- அதிமுக - பாஜகவை தேர்தல் களத் தில் முறியடித்து, 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சிறப்புப் பேரவைக் கூட்டம், கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில்,  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில  செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேக ரன், செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். 

முன்னதாக கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

10 ஆண்டு பாஜக ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை
“தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்கி விட்டது. திமுக உட னான தொகுதிப் பங்கீட்டில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப்பெறுவோம். நாங்கள் ஏற்கெனவே வெற்றிபெற்ற கோயம்புத்தூர், மதுரை தொகுதிகளில் தேர்தல் பணியை துவங்கி, தேர்தல் பேரவை கூட்டங்களை நடத்தி வருகி றோம்.

அதிமுக, பாஜக-வை தேர்தல் களத்தில் முறியடித்து 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவதற்கு உரிய பணிகளை ஆற்றும் வகையில் கட்சியின் அணிகளை களமிறக்கி உள்ளோம். 

‘ராமர் அரசியலை’  மக்கள் ஏற்க மாட்டார்கள்
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த  எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. பாஜக ஆட்சியில் எந்த மக்  கள் நலத் திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை. பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கள் என்பது மக்களின் நினைவில் இல் லாத, காணாமல் போன ஆண்டுகளாக உள்ளது.

செய்த பணிகளை சொல்லி மீண்டும்  ஓட்டுப் போடுங்கள் என கேட்க தைரிய மில்லாமல், அவசர அவசரமாக ராமர் கோவிலை கட்டி பிரதமர் பிரதிஷ்டை செய்துள்ளனர். ராமரை வழிபடுவதை நாங்கள் குறை சொல்லவில்லை. அனைத்து  மக்களுக்கும் இறை உணர்வு, வழி பாட்டு உரிமை உள்ளது. ராமரைக் கொண்டுவந்து வாக்கு சேகரிப்பு பணி யில் ஈடுபடுத்துவதைத்தான் விமர்சிக்கிறோம். ராமரை அரசியலுக்காக பயன்படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு  டெபாசிட் கூட கிடைக்காது
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான கோவில்கள் உள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாக கோவி லுக்கு செல்கின்றனர். ஆனாலும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள். இதுதான் தமிழ்நாடு. பாஜக தனியாக நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. 

பாஜக ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. பத்திரிகையாளர்களை கூட இந்த அரசு சுதந்திரமாக விடவில்லை. பாஜக என்ஐஏ-வை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடமாக்குகிறது. அது பாஜக அடியாளாக செயல்படுகிறது. என்ஐஏ சோதனையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆளுநர் அதிகார வரம்பை  உணர்ந்து நடக்க வேண்டும்
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது அதிகார எல்லையை உணர்ந்து நடந்து கொள்ள  வேண்டும். அதனை மீறி நடப்பது மக்களை கொச்சைப் படுத்தும் காரியம். தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்கள் தொடர்பாக, எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் அளிக்க உள்ளோம்.  

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து, அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பயன்படுத்துவது நல்லதுதான். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்பது நல்ல  பண்பு. மக்களின் ஆதரவைப் பெற்று அவர் வருவதில் தவறில்லை. அவர் வரட்டும். கொள்கைகளை சொல்லட் டும். அவர் கொள்கைகளை பிரகடனப்படுத்திய பிறகே அதுபற்றி கருத்துக்கூற முடியும்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.