districts

இணைய சேவை முடக்கம்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வந்தவர்கள் அவதி

சேலம், செப்.19- சேலம், அஸ்தம்பட்டி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத் திற்கு நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வந்தபோது, இணைய சேவை முடங்கியதால் அதிகாரிகளிடம் பெண் கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறு வதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளி யிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து விண்ணப்பங்கள் பரி சீலனை செய்யப்பட்டு தகுதியுடைய பெண்க ளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கடந்த செப்.15 ஆம் தேதியன்று சுமார் 1.06 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இதில் சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில், நிராகரிக்கப்பட்ட விண்ணப் பங்கள் வருகின்ற செப்.18 ஆம் தேதிக்கு மேல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறி வித்தது.  அதனடிப்படையில் அந்தந்த மாவட்டத் தில் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்க ளில் இ-சேவை மையங்களில் கலைஞர் மக ளிர் உரிமை கிடைக்காத பெண்கள் செவ்வா யன்று முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், அஸ்தம் பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலு வலகத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட ஏராளமானோர் பெண்கள் கலைஞர் மக ளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண் ணப்பிக்க வந்திருந்தனர். அப்போது வட்டாட் சியர் அலுவலகத்தில் மின்னணு சேவை  இ-சேவை முடங்கியது. இதனால் நீண்ட  நேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம டைந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட முயன்றனர். அப்போது வட்டாட்சி யர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்படா மல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அதிகாரி கூறுகையில், மின் னணு முடங்கியதால் இ-சேவை பதிவேற்றம் செய்ய முடியாமல் உள்ளது. சுமார் ஒரு மணி நேரமாக கோளாறு இருப்பதால் பெண்கள் அனைவரும் காத்திருந்து விண்ணப்பிக்க லாம் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நில வியது.

ஈரோட்டில் மறியல்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 5 லட்சத்து 38 ஆயிரத்து  645 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 439 மகளிருக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், விண்ணப்பித்தும் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்வ தற்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி ஈரோடு கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் சிலர் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண் ணப்பிக்க சென்றனர். திடீரென அவர்கள் அலு வலகம் முன்பு உள்ள திருமகன் ஈவெரா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பெண் கள் போராட்டத்தை கைவிட்டு வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு  வட்டாட்சியர் ஜெயக்குமார், தகுதி உள்ள  அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மனுக்கள் பரிசீலனையில் உள் ளன. உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் ஏற்க னவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வட் டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவியாளர் கள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வரு கிறது. எனவே, மேல் முறையீடு செய்யும் பெண் களுக்கு செப்.23 ஆம் தேதி வங்கி கணக்கு களில் பணம் செலுத்தப்படும், என்றார்.