கல்லூரி மாணவர் அசத்தல் கோவை, ஜூன் 26- கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும் வகையில், குறைந்த விலையிலான கருவியை உருவாக்கி அனைவரது கவனத்தை யும் ஈர்த்துள்ளார். கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பரத்குமார் என்ற மாணவர் பிஎஸ்சி எலெக்ட்ரா னிக்ஸ் மூன்றாமாண்டு படித்து வருகி றார். இவர் மாணவப் பருவத்திலேயே பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனைகளைப் புரிந்து வருகிறார். குறைந்த விலை யில் ஆட்டோமேட்டிக் சனிடைசர் இயந்திரம், த்ரீ இன் ஒன் சைக்கிள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த பரத்குமார், தற்போது குறைந்த விலையில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ‘சிக்னல் பூஸ்டர்’ என்ற கருவியை தயாரித்துள் ளார். இதுகுறித்து பரத்குமார் கூறுகை யில், மக்களுக்கு பயன்படும் வகை யில் குறைந்த விலையில் சிறந்த தரத் துடன் விளங்கும் பல்வேறு பொருட் கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். இது வரை தானியங்கி கிருமிநாசினி இயந் திரம், ஸ்கிராப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட சைக்கிள் மற்றும் உணவுப் பொருட்களில் ரசாயன அளவை கண்டுபிடிக்க உதவும் கருவி ஆகிய வற்றை உருவாக்கினேன். எனது கண் டுபிடிப்புக்கு ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனது கண்டுபிடிப்புகளை முறைப்படி விற் பனை செய்து வருகிறேன். எனது நான் காவது படைப்பாக சிக்னல் பூஸ்டர் என்ற கருவியை உருவாக்கி உள்ளேன். இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று பேர் இணையதளத்தை உபயோகப்படுத்தி னாலும், அதன் வேகம் சீரான முறை யில் இருக்கும். மார்க்கெட்டில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த கரு வியை, நான் 1,200 ரூபாய்க்கு தான் விற்பனை செய்கிறேன். எனது இந்த கண்டுபிடிப்புக்கு வரவேற்பு கிடைத் துள்ளது. கல்லூரியிலும் எனக்கு அங்கீ காரம் கொடுத்துள்ளனர். இதேபோல் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளை உருவாக்க நான் முயற்சி செய்து வரு கிறேன், என்றார்.