districts

img

ரஷ்யாவில் சர்வதேச மகளிர் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி

கோவை, ஜன.22- சர்வதேச மகளிர் வூஷூ சாம்பி யன்ஷிப் போட்டிக்கான தகுதித்தேர் வில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5ஆம் தேதி  வரை நடைபெறும் சர்வதேச மகளிர்  வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிக ளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக் கான தேர்வு திங்களன்று கே.பி.ஆர்  கல்லூரி வளாகத்தில் நடைபெற் றது. இதில் கேலோ இந்தியா போட் டிகளில் ஆதிக்கம் செலுத்திய வீராங் கனைகள் மற்றும் தேசிய அளவில் சாதித்த வீராங்கனைகள் உட்பட நாடு  முழுவதும் இருந்து 130 பேர் பங் கேற்று தங்களது திறமையை வெளிப் படுத்தினர்.  இதுகுறித்து வூஷூ அமைப்பின்  அகில இந்திய செயற்குழு உறுப் பினர் சபீர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷ்யாவில் நடை பெற உள்ள சர்வதேச அளவிலான  வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிக ளில் 30க்கும் மேற்பட்ட நாடுக ளில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவி லிருந்து இந்த போட்டிகளில் பங் கேங்கேற்க 40 தகுதி வாய்ந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப் பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பி வைக் கப்பட உள்ளனர். இதற்கான தகுதி போட்டிகளில் சுமார் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 130 வீராங்க னைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த  முறை நடைபெற்ற வூஷூ சர்வதேச  சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தி யாவுக்கு 17 பதக்கங்கள் கிடைத்தது. இந்த முறை கூடுதல் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளுக்கான தகுதி போட்டிகளில் அதிக அளவில் பெறு வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரி வித்தார்.