கோவை, டிச.19- சூலூரில் பலவேறு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவி லான ஆணழகன் மற்றும் அழகிப்போட்டி நடைபெற உள் ளது. கோவை மாவட்டம், சூலூர் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உலக பாடிபில்டிங் பெடரேசன் சார்பில், சர்வ தேச அளவிலான ஆணழகன் மற்றும் அழகிப் போட்டி வரும் 24ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இதில் பல்வேறு நாடு களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ள னர். வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 8 லட்சம் அள விற்கு வழங்கப்பட உள்ளதாக போட்டியை நடத்தும் உலக பாடிபில்டிங் பெடரேசன் சங்க குழுவினர் தெரிவித்தனர். மேலும் ஜூனியர் பிரிவு மற்றும் சீனியர் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ள இந்த ஆணழகன், அழகிப் போட்டியில், தற்போது வரை தாய்லாந்து, மலேசியா, இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து போட்டி யாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறினர்.