மேட்டுப்பாளையம், ஆக.11- கல்லார் அரசு தோட்டக்கலை பண் ணையில் தயார் நிலையில் உள்ள 60 ஆயிரம் பழமர நாற்றுக்களை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற னர். நீலகிரி மலையடிவார பகுதியான கல்லார் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தோட்டக்கலை பழப் பண்ணை இயங்கி வருகிறது. மண் வள மும், நீர் வளமும் நிறைந்த இப்பகுதி யில் நிலவும் சீரான காலநிலை காரண மாக அரிய வகை பழ வகைகளான திரி யன், மங்குஸ்தான், ரம்புட்டான், சிங்க பூர் பலா, வாட்டர் ஆப்பிள், லிட்சி உள் ளிட்ட பழ வகை மரங்களும், மூலிகை, வாசனை திரவிய மற்றும் அலாங்கார பூச்செடிகளும் உள்ளன. இங்கு, பழ மர நாற்றுக்கள் மற்றும் செடிகளின் நாற் றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படு கின்றன. தற்போது பாக்கு, ஜாதிக்காய், எலுமிச்சை, பலா, கொய்யா உள்ளிட்ட பழமர நாற்றுக்களும், மருத்துவ குணம் மிகுந்த மூலிகை மற்றும் வாசனை திர விய செடிகளின் நாற்றுக்கள், வீடுகளில் வளர்க்கப்படும் அலங்கார செடி நாற் றுக்கள் என சுமார் 60 ஆயிரம் நாற்றுக் கள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. தரமான விதை மூலம் உற்பத்தி செய்யப்பட் டுள்ள பழமர நாற்றுக்களை வாங்க விவ சாயிகளும், அலங்கார செடி நாற்றுக் களை வாங்க இங்கு வருகை தரும் சுற் றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வரு கின்றனர்.