கோவை, செப்.20- நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து உள்நோக்கத்துடனே, தமிழ கத்தில் என்ஐஏ சோதனை நடத்துவதாக அனைத்து ஜமாத் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறியதாவது, கோவையில் கடந்த செப். 16ஆம் தேதியன்று 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனைக்கு பிறகு, சிறுபான்மை சமுகத்தின் மீது அவதூறு கற்பிக்கும் வகையில், அரபி கற்பிக்கும் வகுப்பில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக ஆதார மற்ற குற்றச் சாட்டை வெளியிட்டனர். இந்த செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி வந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து பல் வேறு அடக்குமுறைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரு கின்றனர். சோதனை என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து என்ஐஏ அமைப்பானது அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 26ஆம் தேதி கோவையில் 22 இடங்களில் சோதனை நடத்தியுள் ளனர். முபீன் பயின்ற பாடசாலையில் படித்தவர்கள், அவருடன் படித்த மாண வர்களை குற்றவாளிகள் போல பாவித்து அனைவரது வீடுகளில் அத்து மீறி சோதனைகள் செய்வதும், அவர் களின் வீடுகளில் உள்ளவர்களை அதிகாலை 5 மணிக்கு வந்து நெருக்கடி கள் கொடுப்பதும், விசாரணை என்ற பெயரில் அழைக்கழிக்கப்படுவதும் என பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். கோவை கார் வெடிப்பு நிகழ்விற்கு பின்புலமாக இருப்பது யார் என்பதில் ஒரு பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளன. தன் தவறை மறைக்கவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதப் பதட்டத்தை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் அரசியல் தரகர்களின் சூழ்ச்சியாகவே இந்த சோதனையும் உள்ளது என கோவை இஸ்லாமிய கூட்ட மைப்பு சந்தேகம் எழுப்புகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தை வலுவாகவும், வீரியமாகவும் முன் னெடுப்பதில் மதரஸாக்கள் பெரும் பங் காற்றின என்பது வரலாறு. ஆனால் இன்று அத்தகைய வரலாற்றில் களங் கம் ஏற்படுத்தவும், இஸ்லாமிய அடை யாளங்களை கொச்சைப்படுத்தவும், இஸ்லாமியர்களை பொது மக்கள் மத்தி யில் தீவிரவாதத்தை சித்தரிக்கும் நோக்கில் மதரசாவில் தீவிரவாத பயிற்சி என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு இத்த கைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து பல்வேறு சந்தேகங் களுக்குரிய வகையில் என்ஐஏ செயல் படுவதும், முஸ்லிம்களை குறிவைத்தே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடு வதும் கோவை இஸ்லாமிய கூட்ட மைப்பு என்ஐஏ-வின் மீதான நம்பகத் தன்மையற்ற நிலையை ஏற்படுத்து கிறது. எனவே, தமிழகத்திற்குள் என்ஐஏ விசாரணைக்காக வந்தால் தமிழக அரசின் அனுமதி பெறாமல் அவர்கள் வரக்கூடாது என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி அரசா ணையாக வெளியிட வேண்டும் என் றார்.