கோவை, நவ.8- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசாரின் விசாரணை கோப்புகள் அனைத்தும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்ப டைக்கப்பட்டாலும், மாநகர காவல் துறை அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடு பட்டு வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன் படுத்துவது தொடர்பாக காவலர்க ளுக்கு இரண்டு நாள் பயிற்சி செவ்வா யன்று துவங்கியது. காந்திபுரம் பகுதி யில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் 5 வல்லு நர்களை கொண்டு குழு, கோவை மாந கர காவல் துறையில் பணிபுரியும் 20 காவலர்களுக்கு முதல் கட்டமாக 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது மாநகர காவல் ஆணை யர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறுகையில், கோவை மாந கரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடு படும் வாகனங்கள், சட்டம் -
ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப் பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிகள வில் பயன்படுத்தப்படுகிறது. கோவை மாநகர காவல் துறையில் ஏற்கனவே ஒரு ட்ரோன் கேமரா உள்ள நிலையில், அதில் புதுப்பிக்க வேண்டிய அப்ளி கேஷன்கள் மற்றும் புதிய வகையி லான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீ சார் புலனாய்வு செய்த அனைத்து கோப்புகளும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட் டது. இருப்பினும் மாநகர காவல் துறை அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து கோவைக்கு பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட காவல் துறையினர் அந்தந்த மாவட்டங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர பாதுகாப் பில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.