districts

img

காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

உதகை, பிப்.18- முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளை ஒட்டி யுள்ள சாலை ஓரங்களில் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறை யினர் ஈடுபட்டனர். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத பனிக்காலத்தில் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் காய்ந்து சருகாகி விடுவது வழக்கம். மேலும், மரங்களிலிருந்து உதிரும் சருகு கள் சேர்ந்து எளிதில் தீப்பிடிக்கும் தன்மைக்கு மாறிவிடு கின்றன. இந்த வனப்பகுதிகளின் சாலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களால் காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுக் கும் வகையிலும், வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பரவாமல் தடுக்கும் வகையிலும் கோடை காலத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதன்படி சாலைகளின் இருபுறமும் சுமார் 6 மீட்டர் தூரத் தில் செடி, கொடிகளை வெட்டி, அவை உலர்ந்த பின்பு தீ  வைத்து எரிக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், மசினகுடி யில் இருந்து தெப்பக்காடு, மாயார், சிங்காரா, உதகை, பொக்காபுரம் செல்லும் பிரதான சாலைகளிலும், வனப்பகுதி களுக்கு உள்ளே செல்லும் சாலைகளில் சுமார் 400 கி.மீ. தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின் றன. இந்த வருடத்திற்கு முதல் கட்டமாக முதுமலை புலிகள் காப்பகம், வெளிவட்ட மசினகுடி வனச்சரகத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முது மலை வனப்பகுதிக்குட்பட்ட மசினகுடி தெப்பக்காடு சாலை யில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.