24 சதவிகிதம் மட்டுமே வாக்கு பதிவு
24 சதவிகிதம் மட்டுமே வாக்கு பதிவு சேலம், ஏப்.20- இடங்கணசாலை நகராட்சி இ.காட்டூர் வாக்குச்சாவடி யில் 24 சதவிகிதம் மட்டுமே வாக்கு பதிவு செய்யப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட இடங்கணசாலை பேரூராட்சி இ.காட்டூர் அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குச் சாவடி எண் 246 இல் 1083 வாக்குகள் உள்ளது. இதில் பதி வான வாக்குகள் வெறும் 257 மட்டுமே. மேலும் இந்த வாக்குச்சாவடியில் 49 (o) படி வாக்களிக்க விரும்பவில்லை என 42 பேர் வாக்கினை பதிவு செய்யாமல் படிவத்தில் கையொப்பம் போட்டு சென்றனர். இந்த வாக்குச்சாவடியில் 826 பேர் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து உள்ள னர். மொத்தம் பதிவான வாக்கு சதவிகிதம் 24 மட்டுமே. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில் குறைந்த வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்
மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம் உதகை, ஏப்.20- நீலகிரியில் மழைப்பொழிவு குறைந்த நிலையில், தற் போது மலை காய்கறிகளுக்கு மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய் யும். அதனைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்க ளில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவ சாய நிலங்களில் உள்ள கிணறுகள், தொட்டிகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் அதிகமாக காணப்படும். இத னால், விவசாயிகள் காய்கறி தோட்டங்களுக்கு தேவையான தண்ணீர் இயற்கையாகவே கிடைக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் குறித்த சமயத்தில் பருவமழை பெய்வதில்லை. சில சமயங்களில் காலம் தவறி பெய்கிறது. சில சமயங்ளில் அதிக மழை பெய்கிறது. மேலும், சில சமயங்களில் பருவமழை பெய்யாமல் பொய்த்து விடு கிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நி லையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அள விற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்ய வில்லை. இதனால், மலைப்பங்கான பகுதிகளில் உள்ள விவ சாய நிலங்களுக்கு இயற்கையான முறையில் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த நான்கு மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில், விவசாய நிலங்களுக்கு செயற்கை முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. மேலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், அனைத்து பகுதி களிலும் நாள்தோறும் மலை காய்கறிகளுக்கு மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் இதுபோன்று மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வறுமை காரணமாக தற்கொலை முயற்சி
நாமக்கல், ஏப்.20- ராசிபுரம் அருகே வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொ லைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மல்லித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (70). இவரது மனைவி வத்சலா (65). இவர்களுக்கு விமல் (45) என்ற மகன் உள்ளார். கடந்த ஏப்.15 ஆம் தேதி, வீட்டில் வறுமை காரணமாக 3 பேரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், அவர் களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை யளித்தும் பலனின்றி தற்போது சந்திரசேகர் உயிரிழந்தார். வத்சலா, விமல் ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுகுறித்து, ராசிபுரம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வழியாக தில்லிக்கு ரயில் சேவை
சேலம், ஏப்.20- கோடை விடுமுறையை முன்னிட்டு கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக புதுதில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், கோடை விடுமுறை மற்றும் கூட்ட நெரி சலை கருத்தில் கொண்டு எர்ணாகுளம் - புது தில்லி இடையே ஏப்.19 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக் கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில் சேவையானது தற்போது கொச்சுவேலி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவை யானது கொச்சுவேலியில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் மதியம் 2.15 மணிக்குப் புறப் பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக புதுதில்லிக்கு ஞாயிற்றுகிழமைக ளில் இரவு 7 மணிக்கு சென்றடையும். மே 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக் கப்படும். மறு மார்க்கத்தில் புதுதில்லி - எர்ணாகுளம் இடையே வரும் ஏப்.22 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் சேவை யானது புதுதில்லியில் இருந்து திங்கள் கிழமைகளில் அதிகாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு புதன்கிழமைகளில் இரவு 7.10 மணிக்கு கொச்சுவேலியை அடையும். இந்த சிறப்பு ரயில் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
தீ விபத்து: கார்கள் எரிந்து சேதம்
தீ விபத்து: கார்கள் எரிந்து சேதம் கோவை, ஏப்.20- கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் தாமஸ் வில்லி யம் (34). இவர் சரவணம்பட்டி எஸ்.பி.ஜி நகரில் கார் பழுது பார்க்கும் பணிமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று அவர் பணிமனையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் பணிமனையில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கார்கள் தீ பிடித்து எரிய துவங்கியது. இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கோவை கணபதி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த னர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்படு இருந்த 3 கார்கள் மற்றும் 1 பைக் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தாமஸ் வில்லியம் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது விஷமச்செயலா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 7 நாளில் வாலிபர் தற்கொலை
திருமணமான 7 நாளில் வாலிபர் தற்கொலை கோவை, ஏப்.20- திருமணமான ஏழே நாட்களில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், குனியமுத்துார், கணேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (28), இவருக்கும் சூலுார் மதியழ கன் நகரை சேர்ந்த ரோகினி (26), என்பவருக்கும், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இவர்கள் வெள்ள லுார் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்தனர். ரோகினி சூலுாரில் உள்ள தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார். இந்நிலை யில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ள தாக தெரிகிறது. இதனையடுத்து, ரோகினி வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த முருகானந்தம் விரக்தி அடைந்த நிலையில், திடீரென துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இச்சம் பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போத்தனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஊராட்சி முன்னாள் தலைவர் மீது புகார்
நாமக்கல், ஏப்.20- அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக தற்போதைய ஊராட்சி மன்றத் தலை வர் வாழவந்தி நாடு காவல் நிலை யத்தில் புகாரளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் வெள்ளியன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் பணியில், வாக் குச்சாவடி முகவர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கம் வழங்கியுள் ளார். இதைத்தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் நாகலிங்கத் திடம் தோல்வியுற்ற ராஜ்குமார், வெள்ளியன்று இரவு 10 மணியள வில் தெம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த நாகலிங் கத்தை 15க்கு மேற்பட்ட அடியாட் களை வைத்து கொலை செய்ய முயற் சித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜ்குமார் ஒரு கொலை செய்துள்ள தால், தன்னையும் கொலை செய்து விடுவார் என்பதால், தனக்கு பாது காப்பு கேட்டு கொல்லிமலை வாழ வந்தி நாடு காவல் நிலையத்தில் நாக லிங்கம் புகாரளித்துள்ளார். அடியாட் களுடன் தன்னை தாக்க வந்த கண் காணிப்பு கேமரா காட்சிகளை காவல் நிலையத்தில் கொடுத்துள்ள நிலையில், அதனடிப்படையில் நடவ டிக்கை எடுப்பதாக காவல் துறை யினர் உறுதி அளித்துள்ளனர்.
சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு
கோவை, ஏப்.20- கோவை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் மளமள வென குறைந்து வருகிறது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார் காடு அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள் ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கி இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணை யில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் (100 எம்எல்டி) தண்ணீர் எடுக்கலாம். தற்போது கோடை காலம் என்பதா லும் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும் அணை யின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கோடை மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளியன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 13 1/2 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 37 எம். எல். டி. (3 கோடி 70 லட்சம் லிட்டர்) தண்ணீர் வழங் கப்பட்டது. நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் நீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரு கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வில்லை. ஓரிரு நாட்களில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது அணையில் 13 1/2 அடிக்கு தண்ணீர் இருப்பதால் அந்த தண்ணீரை வைத்து வருகிற ஜூன் மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்யலாம். கோடைகாலம் என்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என்றனர்.
நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
நாமக்கல், ஏப்.20- கேரளம் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில், ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தது. இதனைய டுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவை யினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால் நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழி களை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற் போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித் தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண் ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்க னேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக் கின்றனர். நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை கள் மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூ ரிட்டி முறைகளால், பறவைக்காய்ச்சல் நோய் கிருமி கள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணை களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணை யாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சாலை விபத்தில் கணவர் பலி தேர்தல் பணிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்
சேலம், ஏப்.20- ஆத்தூர் அருகே தேர்தல் பணிக் காக ஆசிரியை ஒருவர் தனது கணவரு டன் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில், கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கொண்டலாம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிர காஷ் (39). இவரது மனைவி அனிதா (39), சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று சேலம் மாவட்டம், ஆத் தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக் காக அனிதா தனது கணவர் ஜானி பிர காஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்திடு மாறி கீழே விழுந்ததில் இருவரும் படு காயம் அடைந்தனர். அங்கிருந்த பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்த நாயக்கன்பாளையம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் ஜானி பிர காஷ் உயிரிழந்தார். மேலும், படுகாய மடைந்த அனிதாவை சேலம் அரசு மருத் துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ஜானி பிரகாஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். மயங்கி விழுந்து முதியோர்கள் மரணம் சேலம் மக்களவை தொகுதிக்குட் பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவ டிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இதேபோல சேலம் மாவட் டம், கள்ளக்குறிச்சி மக்களவை தொகு திக்குட்பட்ட கெங்கவல்லியில் வாக்க ளிப்பதற்கு வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.