உதகை, பிப்.16- நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் உறை பனி பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளதால் காய்கறி பயிர்களை வெயி லின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வரு கின்றனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதி களில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்த படி யாக மலைக்காய்கறிகளான முட்டை கோஸ், பீன்ஸ், லீக்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் துவங்கி டிசம்பர் வரை மழை பெய்த நிலையில், பனிப்பொழிவு ஜனவரியில் தாமத மாக துவங்கியது. பகலில் வெயிலும், அதி காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான உறைபனிப் பொழிவு இருந்த தால் தேயிலை மற்றும் காய்கறி பயிர்கள் கருகின. தற்போது பனிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், உதகை சுற்று வட்டார பகுதிகளில் முதல் போக காய்கறி விவ சாய பணிகளை விவசாயிகள் துவக்கி யுள்ளனர். குறிப்பாக உதகை அருகேயுள்ள முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கல்லக் கொரை ஆடா, கேத்தி பாலாடா, கொல்லி மலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சமன்படுத்தி விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உறை பனியின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது இரு நாட்களாக உறை பனி பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், விளை நிலங்களில் பயிரிட் டுள்ள காய்கறி பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு நீர் பாய்ச்சும் பணிகளில் ஈடுபட் டுள்ளனர். கிணறுகளில் உள்ள நீரை மோட்டார் பயன்படுத்தி தெளிப்பு நீர்ப் ்பாசனம் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் நீர் பாய்ச்சி வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும் என்பதால் விவசாய பயிர் களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படகூடிய அபாயம் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பனிப்பொழிவு நிலவி வந்ததால் காய்கறி பயிர்கள் கருகின. மகசூலும் பாதித்தது. தற் போது பனிக்குறைந்த நிலையில் பெரும் பாலான பகுதிகளில் முதல்போக விவசாய பணிகள் துவங்கப்பட்டு விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இத னால் பயிர்கள் பாதிக்காத வண்ணம் தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வரு கிறோம்’ என்றனர்.