கோவை, மே 30- பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளி பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 7 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட் டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப் புத்தகங்கள் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாது காப்பாக இருப்பு வைக்கப்பட்டு இருந் தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு வாக னங்கள் மூலம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாடப்புத்த கங்களை பெற்றுக் கொண்டனர். இந்த பணிகளை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி, அரசு உயர் நிலை, அரசு மேல்நிலை, அரசு உதவி பெறும் மற்றும் ஆதிதிராவிட பள்ளிகள் என மொத்தம் 80 பள்ளிகள் உள்ளன. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 35 ஆயிரத்து 440 மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். எனவே மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்புகள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் கள் மூலம் வாகனங்களில் பள்ளி களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஆசிரியர்கள் மூலம் புத்தகங்கள் வழங் கப்படும், என்றனர்.