districts

கோடை சீசன் நெருங்கும் நிலையில் உதகை ரோஜா பூங்காவில் பராமரிப்பு பணி தீவிரம்

உதகை, மார்ச் 11- கோடை சீசன் நெருங்கும் நிலையில், உதகை ரோஜா பூங்காவில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரமிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது, உதகைக்கு வரும் சுற்றுலா பயணி களை மகிழ்விக்கும் பொருட்டும், கவரு வதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வருகின்றன. இதில், முக்கியமான நிகழ்ச்சிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் கண்காட்சியாகும். கோடை சீசன் நெருங்கும் நிலையில், தோட் டக் கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன் னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, மரவி யல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகி றது.  ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரத் தில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி  நடத்துவது வழக்கம். இதனால், இப்பூங்கா முன்னதாகவே தயார் செய்யப்படும். கடந்த மாதம் இப்பூங்காவில் உள்ள ரோஜா செடி களை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழி யர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.குறிப் பாக, ரோஜா செடிகளை பராமரிக்கும் பணி யில் அதிக அக்கறை செலுத்தி வருகின்ற னர். தற்போது, தினமும் ரோஜா செடிக ளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ரோஜா செடிகளுக்கு தற்போது இயற்கை உர மிடும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களில் ரோஜா செடிகள் நன்கு வளர்ந்து விடும். ஏப்ரல் முதல் வாரத்திற்கு மேல் மொட்டுக்கள் காணப் படும். இரண்டாவது வாரத்திற்கு மேல் பூங்கா முழுவதிலும் உள்ள செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துவிடும். இதனை சுற் றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல லாம் என பூங்கா ஊழியர்கள் தெரிவித் துள்ளனர்.  கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த  இரு ஆண்டுகளாக ரோஜா கண்காட்சி நடத் தப்படவில்லை. ஆனால், நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலை யில், ரோஜா கண்காட்சி நடத்த வாய்ப்புள் ளது. எனவே, இம்முறை உதகைக்கு வரும்  சுற்றுலா பயணிகள் அனைத்து கண்காட்சி களையும், நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து செல்ல வாய்ப்புள்ளது என தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.