districts

img

இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் முயற்சி பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்

நாமக்கல், ஆக.1- அரசு பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக தற் போது சுற்றுச்சுவர் அமைக் கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசி புரம் அண்ணா சாலை அரசு பள்ளி சுற்றுச் சுவர் இடிந்த நிலையில் இருந்தது. இதனை சமூக விரோதிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பள்ளி விளையாட்டு மைதானத்திற் குள் சென்று மது குடிப்பது, பாட்டில்களை உடைத்து எறிவது, மாணவிகளை அச்சுறுத்து வது என சமூக விரோத செயல்களில் ஈடு பட்ட வந்தனர். இதனையடுத்து, இந்திய மாண வர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் இடிந்த சுற்றுசுவரை அப்புறப்படுத்தி உடனடியாக புதிய சுற்றுச் சுவர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக தற்போது இடிந்த சுற் றுச்சுவரை அப்புறப்படுத்தி, புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர் ச.உமாவிற்கு மாணவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.