districts

img

வெள்ளப்பெருக்கை தடுக்க ஆற்றை தூர்வாரும் பணி தீவிரம்

உதகை, ஏப்.11- பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற் படாமல் தடுக்க அத்திக்குன்னா - பொன்னானி ஆற்றை  தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாத வரை தென்மேற்கு  மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இக் காலகட்டத்தில் பலத்த மழை பெய்யும் போது, ஆறு கள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படு கிறது. அப்போது அகலம் குறைந்த இடங்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி அருகே உள்ள ஊருக் குள் புகுந்து விடுகிறது. இதேபோல் பந்தலூர் தாலுகா, அத்திகுன்னா வழியாக பொன்னானி ஆறுக்கு செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கே.கே.நகர், செட்டி வயல் பகுதியில் தண்ணீர் புகுந்து பெரும்  பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வரும் காலத்தில் பருவ மழை பெய்யும் போதுவெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுப் பணி நீர்வளத்துறை மேற்கொண்டுள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீரோடைகளை தூர் வாரும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. இதில், அத்திக்குன்னா வழியாக பொன்னானி ஆற் றுக்கு செல்லும் வாய்க்கால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட்டு வருகிறது. தொடர்ந்து அகலம் குறை வான இடங்களில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வரவுள்ள மழைக்காலத்தில் வெள்ள பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.