திருப்பூர், பிப்.6- பல்லடம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பணப்பட்டுவா டாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பல்லடம் நகராட்சியில் 3 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று தேசியநெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை யினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.