தருமபுரி எம்.பி.யிடம் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மனு
தருமபுரி, ஜூலை 18- எல்ஐசி பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை திரும் பப்பெற நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் மனு அளித்த னர்.
எல்ஐசி பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை திரும் பப்பெற வேண்டும். எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். இக் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணியை நேரில் சந்தித்து, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தருமபுரி கிளை நிர்வாகிகள் மனு அளித் தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் சேலம் கோட்ட துணைத் தலைவர் ஏ.மாதேஸ்வரன், கிளை நிர்வாகிகள் சங்கர், என்.சங்கர், கே.வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண் டனர்.
மேலும், தென்மேற்கு பருவமழை கோவை மாவட் டத்தில் சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் கணிச மாக உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டும் தொடர் கனமழை, மண்சரிவு உள்ளிட்ட காரணங்க ளுக்காக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிக ரித்துள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் குளிக்க செல்வது அருகே சென்று புகைப் படம் எடுப்பது விளையாடுவது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்பு கள் மற்றும் போலீசார் மூலம் பொதுமக்கள் நீர் நிலைக ளுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம் என் றார்.
பாவனி ஆற்றுக்கு நீர் திறப்பு
மேட்டுப்பாளையம், ஜூலை 18- தொடர் மழை காரணமாக நிரம்பி வழியும் பில்லூர் அணையில் இருந்து பாவனியாற்றுக்கு திறந்து விடுவ தால், மாவட்டம் நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகி றது.
தமிழக - கேரள எல்லையோரம் அடர்ந்த காட்டின் நடுவே மலை முகடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்க ளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்து. அதன் நீர் மட்டம் கிடு கிடுவென உயர துவங்கி செவ்வாயன்று (ஜூலை 16) அதிகாலை அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் இதன் நீர்மட்டம் 97.5 அடியை கடந்து அணை நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி யன்று அணை நிரம்பினாலும் அன்று முதல் தற்போது வரை அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த படியே உள்ள நிலையில், புதனன்று காலை அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் முதல் 21 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால் அதை அப்படியே உபரி நீராக அணையில் இருந்து அதன் நான்கு மதகு கள் வழியாக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வரு கிறது.
இதனால், பவானி ஆற்றின் வேகமும் அதிகரித்து கரைபுரண்டோடி வருகிறது. அணையின் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்துவிடப்ப டுவதால், பவானியாற்று கரையோர பகுதிகளான மேட் டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக் கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட் டுள்ளது..
மேட்டுப்பாளையம் பவானியாற்று வெள்ளம் பவா னிசாகர் அணையை சென்றடைவதால் அந்த அணை யின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உருவாகியுள்ளது.
நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்
நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்
கோவை மாவட்டம், சூலூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, சூலூர் அரசினர் பெண் கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு பண்டகசாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்க ளுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களி டம் மாவட்ட ஆட்சியர் அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார். மேலும், வகுப்புகளுக்கு நேரில் சென்று மாணவி களை சந்தித்து ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து உரையாடினார்.
கள ஆய்வின் இடையே ஆட்சியர் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அரசு பள்ளிகள் சி.எஸ்.ஆர் உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிக ராக இணைய வசதி, உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்வு
கோவை, ஜூலை 18- சோலையார் அணையின் மொத்த நீர்மட் டம் 165 அடியில், தற்போது அணையின் நீர் மட்டம் 128 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள் ளதால், வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் பல பகுதிகளில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்ப குதிகள் இருளில் மூழ்கியது. மரங்கள், பாறை கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட் டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்து வருகின்றனர். மழை காரணமாக சோலையார் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. சோலையார் அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி. தற் போது சோலையார் அணையின் நீர்மட்டம் 128 அடியாக உயர்ந்துள்ளது.