கோவை, மார்ச் 5- எல்ஐசி பங்கு விற்பனை ஊழியர் நல னுக்கு எதிரானது மட்டுமல்ல, தேச நல னுக்கு விரோதமானது என ஒன்றிய அர சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன் சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். எல்ஐசியின் பங்குகளைப் பங்குச் சந் தையில் வரிசைப்படுத்தி விற்பனை செய் யும் ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித் தும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர் போராட்டத்தை முன்னெ டுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் சனி யன்று கோவை பவர் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தைக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செய லாளர் எம்.கிரிஜா வாழ்த்துரை வழங்கி னார். இந்த தர்ணாவில் கோவை, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள எல்ஐசி ஊழியர்கள் திரளானோர் பங் கேற்று ஒன்றிய அரசிற்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
ஈரோடு
ஈரோடு தெற்கு கிளை எல்ஐசி அலுவ லகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். இதில், மத்திய மாநில பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.பரமசிவம், வங்கி ஊழியர் சங் கத் தலைவர் பூவேந்திரன், போஸ்டல் யூனி யன் தலைவர் ராமசாமி, இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க இணைச் செயலாளர் தில்லை குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத் திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சேலம் கோட்ட தலைவர் ஆர்.நரசிம்மன் தலைமை வகித்தார். இப்போரட்டத்தை சேலம் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் துவக்கி வைத்தார். இதில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் சுரேஷ், தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப் பின் துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம், இணைச் செயலாளர் கலியபெருமாள், சிஐ டியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் சுரேஷ், இந்திய வங்கி ஊழியர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.எஸ்.ஏ. ராஜேந்திரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கோபால், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குணசேகரன், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெங் கடேஷ், விசிக மாநகர் மாவட்ட பொருளா ளர் காஜாமைதீன் உள்ளிட்ட சேலம், தரும புரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.