districts

img

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முழு விவரங்களையும் தங்கும் விடுதி உரிமையாளர் பதிவு செய்ய அறிவுறுத்தல்

உதகை, ஜன.13- நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங் கும் விடுதி உரிமையாளர்கள் வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பய ணிகளின் முழு விவரங்களையும் சேக ரித்து பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந் தர வடிவேல் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ரெசார்ட் உரிமை யாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீல கிரி மாவட்டத்தில் உள்ள பிரட் அண்ட்  பிரேக்பாஸ்ட் அனுமதி பெற்ற தங்கும்  விடுதி உரிமையாளர்கள், லாட்ஜ், காட் டேஜ் மற்றும் ரெசார்ட் உரிமையாளர் கள் பலர் கலந்துக் கொண்டனர். அப் போது மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சுந்தர வடிவேல் பேசுகையில், மாவட்டத்தில் பிரட் அண்ட் பிரேக் பாஸ்ட் அனுமதி பெற்ற விடுதிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், லாட்ஜ், காட்டேஜ், ரெசார்ட் உரிமையாளர்கள் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ள அனைத்து சட்டத்திட்டங்களை யும் முழுமையாக பின்பற்ற வேண் டும்.  அனைத்து உரிமையாளர்களும்,  தங்களது விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து தகவல்களை முழு மையாக சேகரித்து பதிவு செய்யப்படப் பட வேண்டும். குறிப்பாக, வெளி நாடு களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணி களின் முழு தகவல்களையும் சேகரித்து பதிவு செய்ய வேண்டும்.

அதற்கு தேவையான பார்ம் சி-யை முழுமை யாக பூர்த்தி செய்து வைத்துக் கொள்ள  வேண்டும். இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையினரிடம் கேட்டு அறிந்துக் கொள்ளலாம். மேலும், அனைத்து விடுதிகளிலும், அருகில் உள்ள காவல் நிலையங்களின் தொலை பேசி எண்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போன் எண்களை தகவல் பலகை களில் ஒட்டப்பட வேண்டும்.  அனைத்து லாட்ஜ் மற்றும் காட் டேஜ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், இந்த கேமராக்கள் சம்பந்தப்பட்ட விடு திகளுக்கு செல்லும் சாலைகளிலும் வைத் திருக்க வேண்டும். மேலும், அனைத்து விடுதிகளும் தங்களது விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்றவாறு  பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண் டும். நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்ற னர். எனவே, ஒவ்வொரு விடுதியும், அந்த விடுதி அருகே பார்க்கிங் வசதி களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சாலையோ ரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. பார் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளில் எக்காரணத்தை கொண் டும் மது வழங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  மேலும், சுற்றுலா நகரம் என்பதால்,  சுற்றுலாப் பயணிகள் போர்வையில் சில குற்றவாளிகள் வந்து தங்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, தங்களது விடு திகளில் தங்கும் நபர்களின் முழு விவ ரத்தையும் சேகரிக்க வேண்டும், என் றார்.