தேர்தல் செலவினங்களை முறையாக சமர்பிக்க அறிவுறுத்தல்
தேர்தல் செலவினங்களை முறையாக சமர்பிக்க அறிவுறுத்தல் தருமபுரி, ஏப்.1- மக்களவை தேர்தல் செலவினங்களை முறையாக உரிய ஆவணங்களுடன் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி அறிவுறுத்தி யுள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்க ளவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி தலைமையில், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் முன்னிலையில், தேர்தல் செலவினங் களை கண்காணிக்கும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட் பாளர்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் அலு வலர் கி.சாந்தி பேசுகையில், தேர்தல் ஆணையத்தால் வெளி யிடப்பட்ட தேர்தல் செலவினங்களுக்கான கையேட்டில் தெரி விக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் செலவினக் கணக்குகளை அதற்கான ரசீது, பதிவேடுகள், வங்கிக் கணக்கு அறிக்கை, அனுமதி தொடர்பான ஆவணங்க ளுடன் உரிய படிவங்களில் செலவினப் பார்வையாளரின் ஆய் வுக்கு தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும். இத்தேர் தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பரப் புரை, பொதுக்கூட்டங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், வாக னங்கள், பிரசாரப் பொருள்கள் போன்ற தேர்தல் செல வினங்களை பராமரிப்பதோடு, தினசரி செலவினக் கணக்குப் பதிவேடு, பணப்பதிவேடு, வங்கி கணக்கு பதிவேடு ஆகியன முறையாகப் பராமரிக்கப்பட்டு, உரிய செலவுச் சீட்டு, அனு மதி ஆணைகள், அத்தாட்சிகளுடன் சமர்ப்பிக்க வேண் டும். வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் செலவின முகவ ரால் தினசரி முறையாக எழுதப்பட்டு அதற்கான வரவு மற்றும் செலவின ரசீதுகளை பராமரித்து, உரிய விவரங்களு டன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அறி வுரையின்படி, வேட்பாளர்களின் தேர்தல் செலவின நிதி ரூ.95 லட்சம் என்பதற்குள் இருப்பதோடு, மேற்கொள்ளப் படும் அனைத்து தேர்தல் செலவினங்களும் உரிய முறை யில் பதிவு செய்து, மதிப்பாய்வு செய்யும்போது விவரங் களை சமர்ப்பித்திட வேண்டும். தேர்தல் தொடர்பான நடவ டிக்கைகள் அனைத்தும் உரியவாறு கணக்கில் கொண்டு வரப்படுவதோடு, பறக்கும் படை அலுவலர்கள், நிலை யான கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட செலவி னங்களைக் கண்காணித்திட நியமிக்கப்பட்ட குழுக்கள் இப்ப ணியினை முறையாக கண்காணித்திட வேண்டும், என் றார்.
கஞ்சமலை பகுதியில் காட்டுத்தீ
கஞ்சமலை பகுதியில் காட்டுத்தீ சேலம், ஏப்.1- கோடை வெப்பம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிற நிலையில், வனப்பகுதியில் ஆங்காங்கே தீப்பிடிக்கும் சம்ப வங்கள் நடைபெறுகிறது. இதன்தொடர்ச்சியாக, இளம் பிள்ளை அருகே காஞ்சமலை பகுதியில் திடீர் தீ ஏற்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பகுதி கஞ்சமலை. 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக மலைப்பகுதி உள்ளது. கஞ்சமலை அடிவாரத்தில் சேலத்தில் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், கஞ்சமலை வனப்பகுதி யில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மலைப்பகுதி அருகே ஏராளமான சேலை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள தால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் பல ஆயிரக்க ணக்கான மரங்கள் தீக்கிரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை காலத்தில் இதுபோன்ற தீவிபத்து ஏற்படும் என் பதை உணர்ந்து வனத்துறையினர் மற்றும் தீயனைப்புத்துறை யினரோடு இணைந்து பல்வேறு தடுப்பு பயிற்சிகளை மேற் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
சேலம், ஏப்.1- தேர்தல் நாளன்று வாக்களிக்க உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான கொண்ட லாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில் உதவி தேர்தல் அலுவலர் சீ.பால சந்தர் பங்கேற்றார். சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்ட மன்ற தொகுதியில் 1,454 மாற்றுத்தி றனாளிகள் வாக்களிக்க உள்ளனர். இதில் 175 பேர் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ள தாகவும், மீதமுள்ள 1,279 நபர்கள் வாக் குச்சாவடி மையங்களுக்கே வருகை தந்து தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீ. பாலசந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வாக்குப்ப திவு நாளள்று வாக்குப்பதிவு மையங்க ளுக்கே வருகை தந்து வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்க ளுக்கு, அவர்களுக்கான சிறப்பு ஏற்பா டுகள் செய்யப்படும். சக்கர நாற்காலி யில் வந்து வாக்குப்பதிவு செய்யும் மாற் றுத்திறனாளி, கண்பார்வை குறைபாடு உள்ளவர்களை பாதுகாப்பாகவும், சிர மமின்றியும் அழைத்துச் செல்லும் வகை யில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்யப்படும். கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்தி றனாளிகள் வாக்காளிக்க வசதியாக சின் னம் குறித்து பார்வையற்றவா்கள் தொட்டு பார்த்து உணா்ந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையிலான எழுத்து வடிவம் சேர்க்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் இடத்துக்கு சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து சென்று வாக்குப்பதிவு செய்ய ஏதுவான வசதி செய்யப்படும். அவர்கள் காலதாமதமின்றி வாக்குப்பதிவு செய்ய வும் உரிய ஏற்பாடு செய்யப்படும். சறுக்கு நடைபாதை, பிடித்துச் செல்ல வசதியாக தடுப்புக்கட்டை போன்ற வச திகள் செய்யப்படும். வாக்குப்பதிவு மையத்தில் கண் பார்வையற்றவர்க ளுக்கு சிவப்பு நிற விரிப்புகள் தடுமாற் றத்தை ஏற்படுத்தும் காரணத்தால் அவை பயன்படுத்தப்படமாட்டாது. மாற்றுத்திறனாளிகளுக்கும், கண்கு றைபாடு உள்ளவர்களுக்கும் வாக்குப்ப திவு மையத்தில் தேவையான வச திகள் செய்து தரப்படும், என்றார்.
திருப்பூரில் 13 பேர் போட்டி
திருப்பூர், ஏப்.1- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 13 பேர் போட்டி யிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபிசெட்டிபா ளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளு மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இதில், முதல் நாள் மற்றும் 2 ஆவது நாளில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 22ஆம் தேதி 4 சுயேட்சை வேட்பாளர்கள் மனு கொடுத்தனர். இதன் பின்னர் கடந்த 25 ஆம் தேதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தனர். இது போல் ஒட்டு மொத்தமாக திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 38 பேர் 46 மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 16 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 22 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர் மனுக்களை திரும்ப பெற சனிக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அபிநயா, சந்திர சேகர், சுரேஷ் ஆகிய 3 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது. இதில், ஒரே சின்னங்களை கேட்ட வர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பறக்கும் படை எண்ணிக்கை உயர்வு
பறக்கும் படை எண்ணிக்கை உயர்வு உதகை, ஏப். 1- நீலகிரி மக்களவைத் தொகுதியில் பறக்கும் படை எண்ணிக்கை, 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீலகிரி லோக்சபா தொகுதியில் உதகை, குன்னூர், கோத் தகிரி, மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், உதகை, கூடலூர் குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தற்போது, 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என, மொத்தம், 57 குழுக் கள் இயங்கி வந்தன. இந்நிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைப்படி நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதலாக தலா, ஒன்று பறக்கும் படை குழுக்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டு இதன் மூலம் தற்போது, நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை, 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுமியின் சாவில் சந்தேகம் - போலீசார் விசாரணை!
கோவை, ஏப்.1- கோவை பேரூரில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி, தண்ணீர் தொட்டியில் சந்தேகத்திக்கிடமான வகையில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர், கடந்த ஐந்தாண்டு களாக கோவை பேரூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகின்ற னர். இவரது மனைவி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி யில் மழலையர் தற்காலிக ஆசிரிய ராக பணி புரிந்து வருகிறார். இவர்க ளது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று இவர்கள் வசிக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதற்கு இவரது மகளை கலந்து கொள்ளு மாறு அழைத்து உள்ளனர். அதற்கு, அவரது தாயார் மறுப்பு தெரிவிக்க, கேக் வெட்டிவிட்டு உடனே திரும்பி சென்று விடலாம் என கூறி சிறுமியை அழைத்து உள்ளனர். பின்னர், பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி, இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் தேடி சென்று உள்ளார். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், அருகாமை வீட்டு தண் ணீர் தொட்டியை திறந்து பார்க்கை யில், சிறுமி மிதந்த நிலையில் கிடந் துள்ளார். உடனே சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்து மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பேரூர் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதற்கி டையே சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமி மர ணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை
கோவை, ஏப்.1- அன்னூர் அருகே தனியார் நூற்பாலை யில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கி ரையாகின. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன் னூர் காட்டன் மில்ஸ் என்ற துண்டு(டவல்) தயாரிக்கும் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலை யில் ஞாயிறன்று மாலை நூற்பாலை குடோ னிலிருந்து திடீரென கரும்புகை வெளியே றியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங் கள் வருவதற்கு முன்பே காற்றின் வேகத்தால் தீ மளமளவென நூற்பாலை முழுவதும் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப் பிலான நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையாகின. இந்த தீ விபத்து காரண மாக அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்தது. தகவலின் பெயரில் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட் டுக்குள் கொண்டு வந்தனர். ஞாயிற்றுக்கி ழமை தினத்தன்று, தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அன் னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக் கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசா ரணையை துவக்கி உள்ளனர்.
இந்தியா கூட்டணிக்கு பெருகும் ஆதரவு
மதச்சார்பின்மையும், அரசியல மைப்பும் பாதுகாக்க வேண்டும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் திமுக தலைமையிலான கூட்ட ணிக்கு ஆதரவளிப்பதாக, பல்சமய நல் லுறவு இயக்கம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தில்லைநகர் பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில், சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. பல்வேறு மதம் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இந்த சமத்துவ இப்தார் நோன்பு திறக் கும் நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபி கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலி ருந்த அமைதி இப்போது இல்லை. சிறு பான்மையினர் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்கி இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக இம்முறை நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதோடு, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் திமுக தலைமையிலான கூட்ட ணிக்கு ஆதரவளிப்பதுடன், திருப்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயனுக்கு ஆதரவாக பிரச் சாரம் மேற்கொள்ள உள்ளோம், என் றார்.
மாற்றுப்பாலினத்தவர் விழிப்புணர்வு பேரணி
திருப்பூர், ஏப்.1- நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்க ளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்று பாலினத்தவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி திருப்பூரில் நடைபெற் றது. திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி, கையெழுத்து இயக்கம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிப்ப தற்கான 12டி படிவங்கள் வழங்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து, இருசக்கரப் வாகனங்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், கலை ஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் வாக் களிப்பதன் அவசியம் குறித்து ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. அந்த வரிசையில், திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்று பாலினத்தவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கிறிஸ்துராஜ் துவக்கி வைத் தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.