districts

img

கூடுதல் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விநியோகிக்க அறிவுறுத்தல்

கோவை, ஜூலை 10- வன உயர் பயிற்சியகத்தில் உள்ள நாற் றங்கால் பண்ணையில் வனத்துறை மற்றும்  சுற்றுசூழல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். தமிழக அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33  சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள் ளது. அதன்படி, வன பகுதிகளில் காடு வளர்ப்பு மற்றும் வனப்பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவசாய நிலங் களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது மற்றும் தனியார் பங்களிப்போடு வளர்ந்து வரும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள் ளப்படும். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட் டத்தில், மாவட்ட வன அலுவலகம், கோவை வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன வியல் விரிவாக்க கோட்ட நாற்றங்கால்கள் மூலம், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிலங்களில் மரக் கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது.

அதன்படி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தேக்கு, மகாகனி, மலை வேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, வேம்பு, ஈட்டி, புங்கன், சரக் கொன்றை, புளி, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி, பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் வனவியல் விரிவாக்க நாற் றங்கால்கள் மூலம் உற்பத்தி செய்யும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வனத் துறையின் சார்பில் கோவை வனவியல் விரி வாக்க கோட்டம் மூலம் இலவசமாக 7 ஆயிரம் மரக்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் நாற் றங்கால் உற்பத்தி, எண்ணிக்கை, நடவு செய் யப்பட வேண்டிய இடம் மற்றும் பயனாளிகள் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய் யப்பட்டது.

கோவை மாவட்டத்தின் வனப் பரப்பை அதிகரிக்கச் செய்து, பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன், மாவட்ட நிர்வாகத் துடன் இணைந்து வனத்துறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகோவை வன உயர் பயிற்சியகத்தில் உள்ள நாற்றங்கால் பண் ணையில் வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,  நாற்றங்காலில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்தும், விநியோகப்பட் டுள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். சிறப்பான முறையில் பராமரித்து வரும் நாற் றங்கால் பராமரிப்பு அலுவலகத்திற்கு பாராட் டுகளை தெரிவித்தார். மேலும் நாற்றங்கால் கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடு தல் இடங்களை ஏற்படுத்தி அப்பகுதிகளி லும் நாற்றுகளையும், மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்ய வேண்டும் என வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், ஆனை மலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்பிரமணியன், முதுமலை புலிகள் காப்பக  கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன  அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகா வலர் தினேஷ்குமார் உட்பட வனசரகர்கள் பலர் கலந்து கொண்டனர்.