districts

img

தன்னம்பிக்கையோடு சுயமுடிவு எடுக்க பெண் குழந்தைகளுக்கு அறிவுறுத்தல்

திருப்பூர், ஜன. 24 – பெண் குழந்தைகள் எதிர்கால வாழ்க்கையில் தன் னம்பிக்கையோடு சுயமுடிவு எடுக்க வேண்டும் என்று மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா  கூறினார். ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன் னிட்டு பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பல்லடம் வட்ட  சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மரியாலயா பெண்கள்  மற்றும் பெண் குழந்தைகள் இல்லம் சார்பாக விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர்  சித்ரா தலைமையேற்றார். பல்லடம் பார் அசோசியேஷன் தலைவர் ரவீந்திரன், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் ரியாஸ் அகமது பாஷா  பெண் குழந்தைகள் தங்க ளது இலக்குகளை பெரிதாக வைத்து அதனை நோக்கி தன்னம் பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும், பெண்கள் பன்முகத்  தன்மை கொண்டவர்கள், ஆகவே பெண் குழந்தைகள் வருங் காலத்தில் யாருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் சுய  முடிவுகளை எடுக்கும் நபராக இருக்க வேண்டும் என எடுத்து ரைத்தார். அதனைத் தொடர்ந்து மரியாலயா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு இல்ல இயக்குனர் லூர்து சகா யம், பெண் குழந்தைகள் தற்போது சந்திக்கும் பிரச்சினைகள்  குறித்தும் அவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஆலோ சனைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். பள்ளி தலைமை ஆசி ரியை சாந்தி வாழ்த்திப் பேசினார். இறுதியாக  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  ரியாஸ் அகமது பாஷா தலைமையில் கையெழுத்து பிரச்சா ரம் தொடங்கப்பட்டு மாணவிகள் அனைவரும் பெண் குழந் தைகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்று கையெ ழுத்திட்டனர். இந்நிகழ்வினை குழந்தைகள் உதவி மைய  ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், மரியாலயா குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு இல்ல ஒருங்கி ணைப்பாளர் தினேஷ் பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.