districts

img

தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி

தாராபுரம், பிப்.2- தாராபுரத்தில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி யினை ஆதிதிராவிட நலத்துறை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். தாராபுரம் அருகே உள்ள கொளத் துப்பாளையம் பேரூராட்சியில், நமக்கு  நாமே திட்டத்தின் மூலமாக 52 கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி யினை ஆதிதிராவிட நலத்துறை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி  வைத்தார். இதுகுறித்து ஊர் பொதுமக் கள் தெரிவிக்கையில், கடந்த ஆறு  மாதத்தில் கொளத்துப்பாளையம் கிரா மத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் தொழில் அதிபரின் வீட்டில் நகை மற்றும் ரொக்க பணம் திருட்டு, அதைத்தொ டர்ந்து கடந்த வாரம் பேரூராட்சி துணைத்தலைவர் கே.கே. மீசை துரை சாமி வீட்டில் ஏழு பவுன் நகை மற்றும்  ரொக்க பணம் திருடு போனது. மேலும், விலை உயர்ந்த நாய், கோழி, ஆடு  மற்றும் தானிய பொருட்களை திருட்டு  அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதத்திலும் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டு அறிந்து நடவ டிக்கை எடுக்க எங்கள் கிராமப் பகுதி யில், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக  ஊர் பொதுமக்கள் சார்பில் 3 லட்சத்து  50 ஆயிரம் ரூபாயும், அரசு பொது நிதி யிலிருந்து 7 லட்சம் ரூபாய் பணம் பெற்று தற்போது ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பீட்டில் கரூர் மெயின் சாலையிலி ருந்து பள்ளிவாசல் தெரு, ஆலமரவீதி, நடுவீதி உள்ளிட்ட பகுதிகளில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செய லாளர், பேரூராட்சி தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.