தாராபுரம், மே 18 - தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 21 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு அலுவலக வளா கத்தில் நடைபெற்றது. தாராபுரம் கோட் டாட்சியர் குமரேசன் தலைமையில் வட் டார போக்குவரத்து அலுவலர் சி.செந் தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல், கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்தி ரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தாராபுரம் வட்டார பகு தியைச் சேர்ந்த மூலனூர், குண்டடம், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 21 தனி யார் பள்ளிகளுக்கு சொந்தமான 138 வாகனங்களில் பிரேக் சரியாக உள் ளதா? கதவுகள் சரியாக இயங்குகிறதா? தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, அவசர கால கதவுகள் உள் ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும், ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் அவர்களது உடல் தகுதி திறன் குறித் தும் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 138 வாகனங்களில் நடத்தப்பட்ட ஆய் வில் 21 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவை அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. 117 வாக னங்களுக்கு தகுதி சான்று வழங்கப் பட்டது. இறுதியில் தீயணைப்ப வீரர் கள் அவசர கால மீட்பு பணி குறித்து ஓட் டுநர்களுக்கு பயிற்சி அளித்தனர்.