திருப்பூர், பிப்.5- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிக ளில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.34.28 கோடி மதிப்பீட் டில் தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் உள் ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை புதனன்று மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட் டிற்கு வழங்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடங்கள்) செந்தில் குமரன், செயற்பொறியாளர் (மின்சாரம்) மணியரசு, தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எத்திராஜ், சுப்பிரமணியம், தலைமை மருத்துவர் (தாராபுரம் அரசு மருத்துவமனை) உமா மகேஷ் வரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.