districts

img

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு

திருப்பூர், மே 10- திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார்  ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தென்னம்பாளையம், உழ வர் சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட  இடங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக புதுப்பித்து கட்டப் பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச் சித் திட்டப் பணிகளை திங்களன்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், மாநகராட்சி அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தார். இதில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம்  மற்றும் தென்னம்பாளையம் மார்க் கெட் கட்டுமான பணிகள் நிறைவ டைந்த நிலையில் விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக வும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் . இந் நிகழ்வின்போது மாநகராட்சி துணை  மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.