districts

img

“உங்களை தேடி உங்கள் ஊரில்” மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை,பிப். 1- “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத் தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து  மேட்டுப்பாளையம் தாலூகாவில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.  தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்ப டையில் உங்களை தேடி உங்கள் ஊரில்  நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தில் உள்ள ஏதே னும் ஒரு தாலூகாவில் ஆட்சியர்கள் ஒரு நாள்  தங்கி இருந்து கள ஆய்வு நடத்துதல் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  இத்திட்டத்தின் அடிப்படையில் வியாழ னன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் பல்வேறு துறைகளை  சேர்ந்த அதிகாரிகளும் மேட்டுப்பாளையத் தில் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவல கத்தில் காலை முறைப்படி துவங்கிய இந்நி கழ்ச்சியில் அனைத்து அதிகாரிகளும் கூடி  எங்கெங்கு ஆய்வு பணிகள் நடத்தப்பட  வேண்டும் என பணிகள் பிரித்து கொடுக்கப் பட்டது. ஆட்சியர் தலைமையிலான இக்கு ழுவினர் முதலில் நுகர்பொருள் வாணிப  கழக குடோனில் ஆய்வு செய்தனர். குடோ னில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, பூச்சிகள்  ஏதுமின்றி தரமாக உள்ளதா என அரிசி மூட் டைகளை சோதனை செய்தார். பின்னர் நியாய விலை கடைகளுக்கு சென்று அங்கு  மக்களுக்கு வழங்கப்படும் எண்ணெய் உள் ளிட்ட உணவு பொருட்கள் தேதிகளுக்குள் பொதுமக்களுக்கு வழங்கபடுகிறதா என பாக்கெட்டுகளை பிரித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மேட்டுப்பாளையம் காவல்  நிலையம் சென்ற ஆட்சியர் ஆங்கிருந்த மாவட்ட காவல்துறை அதிகாரி பத்ரி நாரா யணனுடன் இணைந்து ஆய்வு நடத்தினார். ஆவணங்களை சரி பார்த்த ஆட்சியர் காவல் துறையினரின் குறைகளையும் கேட்டறிந் தார். பின்பு அரசு போக்குவரத்து பணிம னைக்கு சென்ற ஆட்சியர் பேருந்து பராம ரிப்பு குறித்தும் பழுது சரிசெய்வது மற்றும் உதிரி பாகங்களின் தரம் குறித்து ஆய்வு செய் தார். மேட்டுப்பாளையத்தில் தங்கும் மாவட்ட  ஆட்சியர் வெள்ளியன்று காலை வரை தனது  ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்சிகளை  தொடர உள்ளார்.