உதகை, அக்.12- சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தலைமையில், வியாழ னன்று அதிகாரிகள் ஊட்டி ரயில் நிலை யத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணி கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை ‘யுனேஸ்கோ’ நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி யன்று உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை நீண்டகால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக, ‘அம்ருத் பாரத்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரயில் நிலையங் களில் குறைந்தபட்சம் அடிப்படை தேவை களை ஏற்படுத்துதல், மாற்று திறனாளி களுக்கு வசதி, ரயில் நிலைய வடிவமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட உள்ளது. மேலும் குன்னுார், ஊட்டி ரயில் நிலையங் களை மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஊட்டி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.