கோவை, டிச.2- மேட்டுபாளையம், நடூர் சுவர் விழுந்த விபத்தில் 17 பேரின் உயிரிழப்புக்கு கார ணமான மேட்டுப்பாளையம் குட்டி (எ) சிவசுப்பிரமணியன் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய வேண்டியும், மீண் டும், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும் என கோவை மாவட்ட வருவாய் அலுவல ரிடம் முற்போக்கு அமைப்பினர் மனு அளித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி மேட்டுப்பாளையம், நடூரில் சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமை யாளர் குட்டி(எ)சிவசுப்பிரமணியன் கட்டி வைத்த சுவர் இடிந்து ஆதிதிராவிடர் கால னியில் மூன்று வீடுகள் தரைமட்டமாகி தலித் மக்கள் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது மேற்படி தீண்டாமைச் சுவரை குட்டி(எ) சிவசுப்பிரமணியனும், அவரது மகன் அரவிந்த் என்பவரும் சட்ட விரோதமான முறையில் 20 அடி உயரத் தில் கட்டியுள்ளனர். நகராட்சி தரப்பில் 7 அடி மட்டுமே கட்ட அனுமதி கொடுக்கப் பட்ட நிலையில் 3 மடங்கு அதிக உயரத் தில் மேற்படி சுவர் கட்டப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டவர் மீது வன்கொ டுமை வழக்கு பதிவு செய்யவும், சட்ட விரோதமான முறையில் கட்டப்பட்ட சுவரை இடிக்க வேண்டியும் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய, மனித உரிமை அமைப்புகள் சார்பில் வியாழ னன்று மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகி யோரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித் தமிழர் பேரவை தலைவர் ரவிக்குமார், மக்கள் சிவில் உரிமைக் கழகம், பால முருகன், சேகர் அண்ணாதுரை மற்றும் தபெதிக சாஜித், மக்கள் அதிகாரம் மூர்த்தி, திவிக நேருதாஸ், சிபிஐ(எம்எல்) சந்தா னம், புரட்சிகர இளைஞர் முன்னணி மல ரவன் உள்ளிட்டோர் பங்கேற்று மனு அளித்தனர். அஞ்சலி செலுத்த சென்றவர்கள் கைது இதனிடையே, நடூர் சுவர் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன் னிட்டு, வெள்ளியன்று காவல் துறையின ரின் தடையை மீறி விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி, சமூக விடுதலை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற் றும் அமைப்புகளை கொண்ட திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தை சேர்ந்தவர் கள் நினைவஞ்சலி ஊர்வலம் நடத்த முயன்றனர். அப்போது அவர்களை காவல் துறையினர் போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது சாலையில் அமர்ந்து போராட முற்பட்டனர். இத னால், ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு பின்னர் போராட்டக்காரர்கள் 100க்கும் மேற்பட் டோர் கைது செய்தனர்.